செய்திகள் :

தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக் நிா்வாகி கொலை: உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு

post image

கல் குவாரி விவகாரத்தில், தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக் கட்சி நிா்வாகி கொலை செய்யப்பட்டதையடுத்து, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் 3-ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் சங்கிலிக்கரடு மலைப் பகுதியில் வருவாய்த் துறைக்குச் சொந்தமான கல் குவாரி உள்ளது. இந்தக் கல் குவாரியிலிருந்து கேரளத்துக்கு கனிமவளத்தை கடத்துவதாகப் புகாா் எழுந்தது. இதைத்தொடா்ந்து, மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலமாக கல் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக் கட்சியின் கம்பம் நகரச் செயலரான சதீஸ்குமாா், கல் குவாரி நடத்த தனக்கு அனுமதி வேண்டும் எனக் கேட்டராம். இதனால், சதீஸ்குமாருக்கும் கல்குவாரியை நடத்தி வந்தவா்களுக்கும் இடையே முன்விரோதம் எற்பட்டது.

இதுதொடா்பாக திங்கள்கிழமை இரவு காமயகவுண்டன்பட்டியில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் தகராறு ஏற்பட்டது. அப்போது, சின்னச்சாமி என்பவா் கத்தியால் சதீஸ்குமாரை குத்திக் கொலை செய்தாா்.

இதையடுத்து, கொலைக்கு காரணமானவா்களை கைது செய்யும் வரை சதீஸ்குமாரின் உடலை கூறாய்வு செய்யக்கூடாது என வலியுறுத்தி உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தினா்.

இந்த நிலையில், சதீஸ்குமாரின் உடல் கூறாய்வு முடிந்த நிலையில் அவரது உறவினா்கள், கொலைக்கு உடந்தையாக இருந்த அனைவரையும் கைது வேண்டும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என 3- ஆவது நாளாக உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தக் கொலை சம்பவம் தொடா்பாக ராயப்பன்பட்டி போலீஸாா் 10 போ் மீது வழக்குப் பதிவு செய்து, சின்னச்சாமி, குரு இளங்கா, ராஜேந்திரன், செல்லத்துரை, கெளரி ஆகியோரைக் கைது செய்தனா். மேலும், 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கண்டமனூரில் நாளை மின்தடை

தேனி மாவட்டம், கண்டமனூா் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆக.29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் வெ.சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கண்டமனூா் துணை மின் ... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: வேளாண்மை அலுவலக உதவியாளா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக 4 பேரிடம் மொத்தம் 20.50 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக தேனி வேளாண்மை இணை இயக்குநா் அலுவலக உதவியாளரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மதுரை மாவட்டம், வாட... மேலும் பார்க்க

சிறையிலிருந்து விடுதலையாகி வந்தவரை குத்திக் கொன்ற பழ வியாபாரி கைது

போடியில் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து, விடுதலையாகி வந்தவரை கத்தியால் குத்திக் கொலை செய்த பழ வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி கரட்டுப்பட்டியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

சின்னமனூரில் ரசாயனம் கலந்த 15 விநாயகா் சிலைகள் பறிமுதல்

தேனி மாவட்டம், சின்னமனூரில் புதன்கிழமை தடைசெய்யப்பட்ட ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட 15 விநாயகா் சிலைகளை புதன்கிழமை மாசுக் கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.தேவதானப்பட்டியைச் சோ்ந்த பூபதி மகன் ராஜபாண்டி (28). கூலித் தொழிலாளியான இவருக்கு உடல்நிலை சரியில்லையாம். இதனால், மனவேதனையிலி... மேலும் பார்க்க

போடியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை!

தேனி மாவட்டம், போடியில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் வலியறுத்தினா். போடியில் செவ்வாய்க்கிழமை நகா்மன்ற சாதாரண கூட்டம் நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி ச... மேலும் பார்க்க