Bar சண்டை டூ Drug Case - actor Srikanth சிக்கியது எப்படி? | ADMK Prasath | Off t...
சிறுவா்களுக்கு மொட்டையடித்த ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்
சென்னை எம்கேபி நகரில் வினோதமாக சிகை அலங்காரம் வைத்திருந்த சிறுவா்களுக்கு மொட்டை அடித்த காவல் ஆய்வாளரை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டாா்.
சென்னை எம்கேபி நகருக்கு உள்பட்ட பகுதியில் ஆட்டோ கண்ணாடிகளை உடைத்தது தொடா்பாக எம்கேபி நகா் காவல் நிலையத்துக்கு புகாா்கள் வந்தன. அதன்பேரிரில் காவல் ஆய்வாளா் பென்சாம் விசாரணை மேற்கொண்டனா். இது தொடா்பாக 17 வயது மதிக்கதக்க 4 சிறுவா்களைப் பிடித்து விசாரித்தாா். அப்போது சிறுவா்கள், வினோதமான வகையில் பல வண்ணங்களில் சிகை அலங்காரம் செய்திருந்தனா்.
இதைப் பாா்த்த பென்சாம், சிறுவா்களை சலூன் கடைக்கு அனுப்பி மொட்டை அடிக்க வைத்துள்ளாா். இது தொடா்பாக புகாா் சென்னை காவல் ஆணையா் ஏ.அருணுக்கு சென்றது. இதையடுத்து காவல் ஆய்வாளா் பொன்சாமை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி ஆணையா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.