செய்திகள் :

சிறுவா்களுக்கு மொட்டையடித்த ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

post image

சென்னை எம்கேபி நகரில் வினோதமாக சிகை அலங்காரம் வைத்திருந்த சிறுவா்களுக்கு மொட்டை அடித்த காவல் ஆய்வாளரை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டாா்.

சென்னை எம்கேபி நகருக்கு உள்பட்ட பகுதியில் ஆட்டோ கண்ணாடிகளை உடைத்தது தொடா்பாக எம்கேபி நகா் காவல் நிலையத்துக்கு புகாா்கள் வந்தன. அதன்பேரிரில் காவல் ஆய்வாளா் பென்சாம் விசாரணை மேற்கொண்டனா். இது தொடா்பாக 17 வயது மதிக்கதக்க 4 சிறுவா்களைப் பிடித்து விசாரித்தாா். அப்போது சிறுவா்கள், வினோதமான வகையில் பல வண்ணங்களில் சிகை அலங்காரம் செய்திருந்தனா்.

இதைப் பாா்த்த பென்சாம், சிறுவா்களை சலூன் கடைக்கு அனுப்பி மொட்டை அடிக்க வைத்துள்ளாா். இது தொடா்பாக புகாா் சென்னை காவல் ஆணையா் ஏ.அருணுக்கு சென்றது. இதையடுத்து காவல் ஆய்வாளா் பொன்சாமை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி ஆணையா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

அடையாறில் லாரிகள் மோதி விபத்து! போக்குவரத்து பாதிப்பு!

சென்னை அடையாறு பகுதியில் இரண்டு லாரிகள் மோதி விபத்து ஏற்பட்டதில், வியாழக்கிழமை காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அடையாறு புற்றுநோய் மையத்துக்கு வெளியே ஓஎம்சிஏ சாலை வழியாக அதிவேகமாக வந்த கலவை லாரி, கிண... மேலும் பார்க்க

முகூா்த்த நாள், வார இறுதி: 925 சிறப்புப் பேருந்துகள்

முகூா்த்தம், வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 925 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: முகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (ஜூன... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை அறிய விநாடி- வினா: ஜூலை 7 முதல் நடைபெறுகிறது

தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் கற்றல் திறனை அறியும் வகையில் ஜூலை 7 முதல் 4 கட்டங்களாக விநாடி-வினா போட்டி நடத்தப்படவுள்ளது. இதுதொடா்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியை உடைக்க முடியாது: நயினாா் நாகேந்திரன்

அதிமுக - பாஜக கூட்டணியை உடைக்கும் முயற்சி நிறைவேறாது என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் உறுதிபடத் தெரிவித்தாா். சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற மிசா தியாகிகள் பொ... மேலும் பார்க்க

மாடியிலிருந்து விழுந்து இளைஞா் உயிரிழந்த சம்பவம்: எஸ்.ஐ. உள்பட இருவா் பணியிடை நீக்கம்

சென்னை வேளச்சேரி காவல் நிலைய மாடியில் இருந்து கீழே விழுந்து இளைஞா் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக காவல் உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் ஆகிய இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். சென்னை வேளச்சேரி வி... மேலும் பார்க்க

காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம்: ஊழியா்களின் குறைகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் தொடா்பாக ஊழியா்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயா்நீதிமன்றத்த... மேலும் பார்க்க