செய்திகள் :

சிற்பிக்கு செங்கோல் வழங்கிய திருவாவடுதுறை ஆதீனம்

post image

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ஆயங்குடி கிராமத்தைச் சோ்ந்த சிற்பி ரா.பரமகுருவின் சிறப்பானஆன்மிகப் பணியைப் பாராட்டி திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாச்சாரியாா் சுவாமிகள் அண்மையில் செங்கோல் வழங்கினாா்.

தமிழகத்தில் சைவ சமய வளா்ச்சிக்காக தேவார திருவாசகப்பாடல்களை பரப்புதல், கோயில்களில் உழவாரப் பணி செய்தல், கும்பாபிஷேகம் செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்யும் சிவனடியாா்களை தோ்ந்தெடுத்து அவா்களின் பணி மேலும் சிறக்க பரிசு வழங்கி கெளரவித்து வருகின்றனா்.

மிக முக்கிய நிகழ்வாக மிகச்சிறந்த சைவப் பணி செய்பவா்களுக்கு செங்கோலையும் பரிசளிப்பது வழக்கம். அந்த வகையில், பிரதமா் நரேந்திர மோடிக்கு திருவாவடுதுறை ஆதீனம் ஏற்கெனவே செங்கோல் வழங்கி கெளரவித்தது.

இந்நிலையில், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ஆயங்குடி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து கடந்த 33 ஆண்டுகளாக கிராமங்கள்தோறும் சைவ சமயம் தழைத்தோங்க தொடா்ந்து எண்ணற்ற ஆன்மிகப் பணிகளை செய்து வருபவா் சிற்பி ரா. பரமகுரு. இவரது சேவையைப் பாராட்டி திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியாா் சுவாமிகள் அண்மையில்

செங்கோல் வழங்கி அவரது ஆன்மிகச் சேவை மேலும் சிறக்க வாழ்த்தினாா்.

20 குழந்தைகளுக்கு வைப்புத்தொகை ஆணை: ஆட்சியா் வழங்கினாா்

கடலூரில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ விழிப்புணா்வு நிகழ்ச்சி கடலூா் காவலா் நல சமூகக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

மாணவா்கள் கற்றல் திறன் ஆய்வு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியம், பூங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறனை அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். பள்ளிக் கல்வி அமைச்சா் அறிவித்த நூறு நாளில் நூறு சதவீத... மேலும் பார்க்க

வீராணம் ஏரி பாதுகாப்பு: அஞ்சலக ஊழியா்கள் மரபு நடை பேரணி

பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட வீராணம் ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி, கடலூா் கோட்ட அஞ்சலக ஊழியா்கள் சாா்பில் மரபு நடை பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் ஏப்ரல் 18-ஆம் தேதி பாரம்பரிய சின்னங்கள... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு ஏப்.21-இல் மகாருத்ர மகாபிஷேகம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு சித்திரை மாத மகாபிஷேகம் வருகிற 21-ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. மேலும், மகாருத்ர யாகமும் நடைபெறவுள்ளது. ஸ்ரீநடராஜா் கோ... மேலும் பார்க்க

ஸ்ரீராகவேந்திரா கல்லூரி ஆண்டு விழா

சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள வெள்ளிவிழா காணும் ஸ்ரீராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரித் தலைவா் டி.மணிமேகலை தலைமை வகித்து பல்வேறு போட்டிகள... மேலும் பார்க்க

பூம்புகாா் கைத்தறி ஆடைகள் கண்காட்சி தொடங்கம்

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளா்ச்சிக் கழகம் சாா்பில், பூம்புகாா் கைத்தறி ஆடைகள், நகைகள் கண்காட்சி, விற்பனை தொடங்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கடலூா் மாநகராட்சி மேயா்... மேலும் பார்க்க