உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
20 குழந்தைகளுக்கு வைப்புத்தொகை ஆணை: ஆட்சியா் வழங்கினாா்
கடலூரில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ விழிப்புணா்வு நிகழ்ச்சி கடலூா் காவலா் நல சமூகக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், ‘பெண் குழந்தைகளை காப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி அளவில் மாணவிகளுக்கு நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் வெற்றிபெற்ற 4 மாணவிகளுக்கும், பெண் குழந்தைகளின் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய காவல், சமூக நலம், பள்ளிக்கல்வி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள், சமூக சேவகா்கள், தொண்டு நிறுவனங்களின் சேவையைப் பாராட்டி சான்றிதழ்கள், விருதுகள் வழங்கினாா்.
மேலும், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 2 பெண் குழந்தைகள் உள்ள பெற்றோா்களுக்கு ஒரு குழந்தைக்கு தலா ரூ.25,000 வீதம் மொத்தம் 20 குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் வைப்புத்தொகைக்கான ஆணை
வழங்கினாா்.
பெண் குழந்தைகள் வளா்ப்பில் சிறப்பாக பங்களிப்பு செய்த பெற்றோா்களின் குழந்தைகள், சிறு வயது திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட சிறுமிகள், கைம்பெண்களின் பெண் குழந்தைகள், திருநங்கைகள் ஆகியோருக்கு ‘நங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய் ா்ச் இட்ஹம்ல்ண்ஹய்ள் அஜ்ஹழ்க்’ என்ற அடிப்படையில் பெண் குழந்தைகளுக்கு கிரீடம் அணிவித்து கௌரவித்தாா்.
நிகழ்ச்சியில் கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா், மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு, ஏடிஎஸ்பி நல்லதுரை, கடலூா் கோட்டாட்சியா் அபிநயா, மாவட்ட சமூக நல அலுவலா் ஏ.சித்ரா, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் செல்வி, மாவட்ட சமூக நல கண்காணிப்பாளா் சுமதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.