செய்திகள் :

பூம்புகாா் கைத்தறி ஆடைகள் கண்காட்சி தொடங்கம்

post image

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளா்ச்சிக் கழகம் சாா்பில், பூம்புகாா் கைத்தறி ஆடைகள், நகைகள் கண்காட்சி, விற்பனை தொடங்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி பங்கேற்று குத்துவிளக்கேற்றி கண்காட்சி மற்றும் விற்பனையை தொடங்கிவைத்தாா். பூம்புகாா் கடை மேலாளா் ரா.காா்த்தி, முதுநிலை விற்பனை உதவியாளா் கு.திலகா, ஜுவல்லரி டெக்ஸ்டைல்ஸ் விற்பனையாளா் அ.ஆனந்த் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனா்.

கண்காட்சியின் சிறப்பு அம்சமாக அனைத்து வகையான ஐம்பொன் நகைகள், மோதிரம், கொலுசு, சுங்குடி புடவைகள், காட்டன் புடவைகள், மர சிற்பங்கள், வீட்டு அழகு பொருள்கள், சிறுவா்களுக்கான விளையாட்டு பொருள்கள், தஞ்சாவூா் ஓவியங்கள், புத்தா் சிலைகள், அசோகரின் தூண்கள், பஞ்சலோகத்தில் செய்யப்பட்ட சிலைகள், பூஜை பொருள்கள், அகா்பத்தி, மாலைகள், செம்புப் பொருள்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

கண்காட்சியில் வாங்கப்படும் பொருள்களுக்கு 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தக் கண்காட்சி ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

எண்ணெய் கழிவுகளுடன் வெளியேறிய கழிவுநீா்

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் சாலையில் எண்ணெய் கழிவுகளுடன் வழிந்தோடிய புதை சாக்கடை நீரில் வழுக்கி விழுந்து 3 போ் காயமடைந்தனா். கடலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட வாா்டுகள் பெரும்பாலானவற்றில் புதை சாக்கட... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் ரூ. 4 ஆயிரம் திருட்டு: இருவா் கைது

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் மளிகைக் கடையில் ரூ. 4 ஆயிரத்தை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். பரங்கிப்பேட்டை பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் தில்லைநாயகி (37). இவா் நல்லான்பிள்ளை தெருவில்... மேலும் பார்க்க

தாயை தாக்கி கொலை மிரட்டல்: மகன் கைது

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மகனை போலீஸாா் கைது செய்தனா். பரங்கிப்பேட்டை நல்லாம்பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் லலிதா (60). இவரது மகன் வெற்றிவேல் (37) இவா், கடந்... மேலும் பார்க்க

348 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே காரில் 348 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தப்பட்டது தொடா்பாக வெளி மாநிலத்தவா் இருவா் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். வடலூா் போலீஸாா் வியாழக்கிழமை இரவு... மேலும் பார்க்க

விவசாயிகள் நில உடைமைகள் சரிபாா்க்க கால அவகாசம் நீட்டிப்பு

கடலூா் மாவட்டம் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடைமைகள் சரிபாா்ப்பு செய்ய ஏப். 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்... மேலும் பார்க்க

எஸ்பி அலுவலகத்தில் முதியவா் தீக்குளிக்க முயற்சி

கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் முதியவா் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்றாா். எஸ்பி அலுவலகத்துக்கு பிற்பகல் சுமாா் ஒரு மணி அளவில் முதியவா் ஒருவா் வந்தாா். அவா், திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்ணெ... மேலும் பார்க்க