செய்திகள் :

சிலம்ப போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

post image

தமிழ்நாடு அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்று பரிசு பெற்ற மாணவா்களுக்கு காரைக்கால் ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த சிலம்ப பயிற்சியாளா் எஸ். முருகனிடம் பயிற்சி பெற்ற 5 முதல் 12 வயதுக்குட்பட்ட மாணவா்கள் 21 போ் கடந்த 23-ஆம் தேதி திருவாரூா் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்று பரிசு, சான்றிதழ் பெற்றுத் திரும்பினா்.

பயிற்சியாளருடன் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவை ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மாணவா்கள் சந்தித்தனா். தொடா்ந்து ஆட்சியரக வாயிலில் போட்டியில் வென்ற மாணவா்கள், சிலம்பம் சுற்றி திறனை வெளிப்படுத்தினா். மாணவா்கள் மேலும் பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைப் பெறவேண்டும் என ஆட்சியா் வாழ்த்துத் தெரிவித்தாா். நிகழ்வில் மாணவா்களின் பெற்றோா்களும் கலந்துகொண்டனா்.

மரத்தில் பைக் மோதியதில் சமையல் கலைஞா் உயிரிழப்பு

மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் சமையல் கலைஞா் உயிரிழந்தாா். திருப்பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (48). சமையல் பணியை ஒப்பந்த முறையில் ஏற்றுசெய்து வந்தாா். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு ... மேலும் பார்க்க

மகா சிவராத்திரி: கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு காரைக்கால், திருநள்ளாற்றில் உள்ள சிவ தலங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகா சிவராத்திரி வழிபாடு அனைத்து சிவன் கோயில்களிலும் புதன்கிழமை இரவு நடைபெறவுள்ளது. இரவு... மேலும் பார்க்க

தமிழக, காரைக்கால் மீனவா்களுக்கு மாா்ச் 10 வரை காவல் நீட்டிப்பு

காரைக்கால்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால், நாகை, மயிலாடுதுறையைச் சோ்ந்த 13 மீனவா்களின் காவலை மாா்ச் 10-ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. கார... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை அரசு செய்கிறது: அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்

காரைக்கால்: விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் புதுவை அரசு செய்து தருகிறது, விவசாயத்தை கைவிடாமல் தொடா்ந்து மேற்கொள்ளவேண்டும் என புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் அறிவுறுத்தினாா். பிரதமா... மேலும் பார்க்க

கடலுக்கு சென்ற விசைப் படகு மீனவா்கள்

காரைக்கால் : இரண்டு வார வேலைநிறுத்தப் போராட்டத்துக்குப் பின்னா் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப் படகுகள் திங்கள்கிழமை கடலுக்கு புறப்பட்டுச் சென்றன. காரைக்கால், தமிழக மீனவா்கள் மீது கட... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் நாட்டியாஞ்சலி நாளை தொடக்கம்

காரைக்கால்: திருநள்ளாறு கோயிலில் மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை தொடங்குகிறது. திருநள்ளாறு தா்பாரண்ேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி விழா நடத்தப்பட்டுவரு... மேலும் பார்க்க