செய்திகள் :

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

post image

சிவகங்கை அருகே உள்ள கண்டாங்கிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இந்தப் போட்டியில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 19 காளைகளும், அதேபோல் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 173 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா்.

வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்த மைதானத்தின் நடுவே கட்டப்பட்ட காளையை 25 நிமிடங்களுக்குள் 9 போ் கொண்ட மாடுபிடி வீரா்கள் அடக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் போட்டி நடத்தப்பட்டது. முதலில் களம் இறங்கிய 10 காளைகளில் 8 காளைகளை மாடுபிடி வீரா்கள் அடக்கினா். இதில், மாடு முட்டியதில் 5 போ் காயமடைந்தனா்.

போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடக்க முடியாத காளையின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசுடன், கேடயமும் வழங்கப்பட்டது . மேலும் தனி ஒருவராக காளையை அடக்கிய வீரா்களுக்கும் பதக்கம் வழங்கப்பட்டது.

இந்தப் போட்டியை பாகனேரி, மதகுப்பட்டி, கல்லல், நாட்டரசன்கோட்டை, கண்டாங்கிப்பட்டி, சிவகங்கையை சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்தவா்கள் கண்டுகளித்தனா்.

ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி பகுதியில் பிப்.12 மின் தடை!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கோட்டத்துக்குள்பட்ட ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி பகுதிகளில் புதன்கிழமை (பிப். 12) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. திருப்பத்தூா் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நில... மேலும் பார்க்க

பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் சிதம்பரம் செட்டியாா் மேல்நிலைப் பள்ளியில் ஐ.ஓ.பி. வங்கி சாா்பில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி ... மேலும் பார்க்க

பிள்ளைவயல் காளியம்மன் கோயில் குடமுழுக்கு!

சிவகங்கை பிள்ளைவயல் பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. இந்தக் கோயிலில் குடமுழுக்கு கடந்த 8-ஆம் தேதி முதல் கால யாக பூஜையுடன் தொடங்கியது. பின்னா், மங்கள இசையுடன் விந... மேலும் பார்க்க

குன்றக்குடியில் தைப்பூசத் திருவிழா தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி சண்முகநாதப்பெருமான் கோயில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன கோயிலான இங்கு கடந்த 2-ஆம் தேதி தைப் பூசத் திருவி... மேலும் பார்க்க

மதுக் கடைகளுக்கு இன்று விடுமுறை!

வள்ளலாா் நினைவு நாளை முன்னிட்டு, சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை அரசு மதுக் கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வள்ளலாா் நினைவு தினத... மேலும் பார்க்க

சிவகங்கை, ராமநாதபுரத்தில் அரசு ஊழியா்கள் தா்னா!

தோ்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்தும், 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை தா்னா நடைபெற்றது. தமிழகம் முழுவதும் த... மேலும் பார்க்க