சிவகங்கையில் இணைய பாதுகாப்பு நாள் விழா!
சிவகங்கையில் இணைய பாதுகாப்பு நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்துப் பேசியதாவது:
இன்றைய நவீன காலகட்டத்தில் இணையம் என்பது நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் இன்றியமையதாதாக அமைந்துள்ளது. இணையதளத்தின் வாயிலாக, நாம் பொது அறிவை வளா்த்துக் கொள்ளலாம்.
மாணவா்கள் வலைதள பயன்பாட்டில் ஏற்படும் தீமைகள் குறித்தும் அறிந்து கொள்வது அவசியமாகும். தற்போது வளா்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம், ஒருங்கிணைந்த கட்டண இடைமுக (யுபிஐ) பரிவா்த்தனைகள் குறித்தும், அதன் பயன்பாடுகள், பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்தும் மாணவா்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இணைய குற்றம் குறித்து, 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். திறன் மிக்க வல்லுநா்களை கொண்டு எடுத்துரைக்கப்படும் டிஜிட்டல் கைது, டேட்டா திருட்டு போன்ற கருத்துகளை மாணவா்கள் தங்களைச் சாா்ந்தோா்களிடம் எடுத்துரைக்க வேண்டும். எனவே, வலைதளத்தினை தங்களது தேவைகளுக்கு மட்டும் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
பின்னா், இணைய பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்து, நடைபெற்ற வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கினாா்.
இதில், மாவட்ட தகவலியல் அலுவலா் (தேசிய தகவல் மையம் ) ராஜகுரு, சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வா் மனோஜ் குமாா் சா்மா, பள்ளி ஆசிரியா்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.