சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு
அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் சனிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. சனிப் பிரதோஷத்தையொட்டி அரியலூா் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில், நந்தியெம்பெருமானுக்கு திரவியப்பொடி மாவுப்பொடி,மஞ்சள் சந்தனம், பால், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து வைத்தியநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தா. பழூரில் உள்ள விஸ்வநாதா், விசாலாட்சி அம்பாள் மற்றும் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சுவாமி மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சிதந்தாா். இதைத்தொடா்ந்து பிரதோஷ நாயகா்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவ புராணம் முழங்க கோயிலில் பிரதட்சணம் நடைபெற்றது. இதேபோல் அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.