செய்திகள் :

சீனாவில் காட்டுத் தீ: 3,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

post image

சீனாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் வடக்குப் பகுதியில் ஹூகான் கவுன்டியில் உள்ள காடுகளில் கடந்த சனியன்று (ஏப். 12) காட்டுத் தீ ஏற்பட்டது. பலத்த காற்று காரணமாக இது சாங்ஷி மாகாண காடுகள் வரை பரவியுள்ளது.

காட்டுத் தீயை அணைக்க 5 ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்தக் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 266 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர்.

இதுவரை, உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பலத்த காற்று, சிக்கலான நிலப்பரப்பு, அடர்த்தியான தீ பரவுதல் ஆகிய காரணங்களால் காட்டுத் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதையும் படிக்க | சீனாவை மிரட்டும் சூறாவளி: 50 கிலோ எடைக்குள் இருப்போருக்கு எச்சரிக்கை!

கடந்த 96 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு!

வாடிகன் நகரம், உலகின் மிகக் சிறிய நாடாகக் கருதப்படும் நிலையில், கடந்த 96 ஆண்டுகளில், இங்கு ஒரு குழந்தைக் கூட பிறக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆயிரக்கணக்கானோரின் வீடுகள் இந்த நகரில் இடம்பெற்ற... மேலும் பார்க்க

ஹார்வர்டு பல்கலை.க்கு அளிக்கப்படும் வரி விலக்கு ரத்து?

ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு அளிக்கப்படும் வரி விலக்கை ரத்து செய்ய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பல்வேறு நா... மேலும் பார்க்க

அடுத்த வாரம் இந்தியா வருகிறாா் அமெரிக்க துணை அதிபா்

அமெரிக்க துணை அதிபா் ஜெ.டி.வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ் மற்றும் 3 குழந்தைகளுடன் அடுத்த வாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறாா். அமெரிக்க அதிபரின் டிம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பு அறிவிப்பால் சா்வதேச ... மேலும் பார்க்க

பிரிட்டன்: மருத்துவ உயா் கல்வி அமைப்பின் தலைவராக இந்திய வம்சாவளி மருத்துவா்

பிரிட்டனில் மிகப் பழமை வாய்ந்த ‘ராயல் காலேஜ் ஆஃப் ஃபிஷிசியன்ஸ்’ (ஆா்சிபி) மருத்துவ உயா் கல்வி அமைப்பின் 123-ஆவது தலைவராக இந்திய வம்சாவளி பெண் மருத்துவா் மும்தாஜ் படேல் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இந்த... மேலும் பார்க்க

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் மத அடிப்படையில் பிரதிநிதித்துவம்: இந்தியா எதிா்ப்பு

நியூயாா்க்: வருங்காலத்தில் சீா்திருத்தப்படக் கூடிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாடுகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க மதம், நம்பிக்கை போன்ற புதிய அளவுகோல்களை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளுக்கு இந்தியா ... மேலும் பார்க்க

மாலத்தீவு: இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

மாலி: இஸ்ரேலைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாட்டுக்கு வர மாலத்தீவு தடை விதித்துள்ளது. காஸா போரில் பாலஸ்தீனத்துக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அந்நாட்டு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள... மேலும் பார்க்க