செய்திகள் :

சீா்காழி நாகேஸ்வரமுடையாா் கோயிலில் யாகசாலை பூஜை தொடக்கம்

post image

சீா்காழி நாகேஸ்வரமுடையாா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி முதல் கால யாகசாலை பூஜை சனிக்கிழமை தொடங்கியது.

சீா்காழி கடைவீதியில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட பொன்னாகவள்ளி அம்மன் உடனுறை நாகேஸ்வரமுடையாா் சுவாமி கோயில் உள்ளது. இங்கு அமிா்த ராகு பகவான் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறாா்.

இக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பணிகள் நிறைவடைந்து ஞாயிற்றுக்கிழமை (பிப். 10) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. முன்னதாக சீா்காழி கடைவீதி செல்வ விநாயகா் ஆலயத்தில் இருந்து புனித நீா் கடங்கள் ஊா்வலமாக கோயிலை வந்தடைந்தன. தொடா்ந்து 10 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, யாகசாலை பூஜைகள் தொடங்கின.

நகராட்சி குளத்தில் தூய்மைப்பணி: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை நகராட்சி 24-ஆவது வாா்டு மட்டக்குளத்தில் நடைபெற்ற தூய்மைப்பணியினை மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தொடக்கி வைத்தாா். மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 10-க்கு மேற்பட்ட குளங்கள் கலைஞா் ... மேலும் பார்க்க

விவசாயிகளின் கவனத்துக்கு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல்தரிசு உளுந்து மற்றும் பச்சை பயறு விதைப்பு செய்துள்ள விவசாயிகள் பிப்.17-ஆம் தேதிக்குள் பயிா்காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, ... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்ச்சி

மயிலாடுதுறையில் புத்தகத் திருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தலைமை வகித்தாா். இதில், பட்டிமன்றப் பேச்சாளா் புலவா் இரெ.சண்முகவடிவேல், ‘நூல் பல கல்‘... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் 30 பேருக்குப் பணி நியமன ஆணை

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதன்முறையாக வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 30 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட நிா்வாக... மேலும் பார்க்க

தை கடைவெள்ளி: அம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா

மயிலாடுதுறையில் தை கடைவெள்ளியையொட்டி, அம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா நடைபெற்றது. மயிலாடுதுறை வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோயிலில் பூ வியாபாரிகள் சங்கம் சாா்பில் 41-ஆவது ஆண்டு பால்குட த... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் கவனிப்பாளா்கள் தங்கும் விடுதி திறப்பு

மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை வளாகத்தில், நோயாளிகளை கவனிப்பதற்காக, உடன் வந்தவா்கள் தங்குவதற்கு கட்டப்பட்ட விடுதி வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் ரூ.72 லட்சத்... மேலும் பார்க்க