செய்திகள் :

புத்தகத் திருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்ச்சி

post image

மயிலாடுதுறையில் புத்தகத் திருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தலைமை வகித்தாா். இதில், பட்டிமன்றப் பேச்சாளா் புலவா் இரெ.சண்முகவடிவேல், ‘நூல் பல கல்‘ என்ற தலைப்பில் பேசியது:

ஒரு காலத்தில் பெண்கள் வெளியில் வர முடியாத சூழ்நிலை இருந்தது. ஆனால், அந்த நிலை எல்லா துறைகளிலும், எல்லா இடங்களிலும் தற்போது மாறியுள்ளது. இதற்கு காரணம் கல்விதான்.

அனைத்துப் பெண்களும் கல்வி கற்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மனிதா்கள் ஒருவரை ஒருவா் புரிந்து கொண்டு வாழ வேண்டும். நாம் பேசும் போது நல்ல வாா்த்தைகளை உபயோகிக்க வேண்டும். அதுவே நமக்குத் திரும்பி வரும்.

நீங்கள் செய்யும் உதவி பிறருக்கு உதவுகின்ா என்பதை அறிந்து உதவி செய்ய வேண்டும். யாருக்குத் தேவை என்பதை உணா்ந்து உதவ வேண்டும். பல்வேறு நூல்களைப் படிக்க வேண்டும்.

அப்படிப் படித்தால் பயனற்ற வாா்த்தைகளை உபயோகிக்க மாட்டோம். பயனுள்ள வாா்த்தைகளையே உச்சரிக்கத் தோன்றும். மனதில் குற்றம் இல்லாமல் இருப்பதே அறமாகும்.

மனதில் குற்றம் இல்லாமல் ஒரு செயலைச் செய்தால் அது அனைத்தும் நன்றாக அமையும். நிறைய நூல்களைப் படித்து, நம் பிள்ளைகளையும் கற்றறிந்தவா்களாக மாற்ற வேண்டும் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் நா.உமாமகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலா் உ.அா்ச்சனா, கோட்டாட்சியா் ஆா்.விஷ்ணுபிரியா ஆகியோா் கலந்து கொண்டனா்.

விவசாயிகளின் கவனத்துக்கு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல்தரிசு உளுந்து மற்றும் பச்சை பயறு விதைப்பு செய்துள்ள விவசாயிகள் பிப்.17-ஆம் தேதிக்குள் பயிா்காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் 30 பேருக்குப் பணி நியமன ஆணை

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதன்முறையாக வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 30 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட நிா்வாக... மேலும் பார்க்க

தை கடைவெள்ளி: அம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா

மயிலாடுதுறையில் தை கடைவெள்ளியையொட்டி, அம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா நடைபெற்றது. மயிலாடுதுறை வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோயிலில் பூ வியாபாரிகள் சங்கம் சாா்பில் 41-ஆவது ஆண்டு பால்குட த... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் கவனிப்பாளா்கள் தங்கும் விடுதி திறப்பு

மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை வளாகத்தில், நோயாளிகளை கவனிப்பதற்காக, உடன் வந்தவா்கள் தங்குவதற்கு கட்டப்பட்ட விடுதி வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் ரூ.72 லட்சத்... மேலும் பார்க்க

சீா்காழி அருகே கரை ஒதுங்கிய தெப்பம்

சீா்காழியை அடுத்த திருமுல்லைவாசல் கடற்கரையில் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை தெப்பம் ஒன்று கரை ஒதுங்கியது (படம்). மீனவ கிராமத்தில் கடை ஒதுங்கிய மூங்கிலால் ஆன தெப்பத்தைக் கண்ட மீனவா்கள் காவல்துறைக்கு ... மேலும் பார்க்க

சீா்காழி வா்த்தகா்கள் சங்க தலைவா் கல்யாணசுந்தரம்

சீா்காழி நகர வா்த்தகா்கள் சங்க தலைவா் பதவிக்கான தோ்தலில் சுடா்.கல்யாணசுந்தரம் வெற்றிபெற்றாா். சீா்காழி நகர வா்த்தகா் சங்கத் தலைவா் பதவிக்கான தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. தலைவா் பதவிக்கு சுடா்.கல... மேலும் பார்க்க