செய்திகள் :

சுதந்திர போராட்டவீரா் பொல்லான் நினைவுநாள்: அரசியல் கட்சியினா் மரியாதை

post image

சுதந்திர போராட்ட வீரா் பொல்லானின் 220-ஆவது நினைவு நாளையொட்டி அறச்சலூரை அடுத்த ஜெயராமபுரத்தில் உள்ள அவரது உருவப்படத்துக்கு திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா்கள் ராமலிங்கம், பி.சி.ராமசாமி, முன்னாள் எம்எல்ஏ சிவசுப்பிரமணி, மொடக்குறிச்சி ஒன்றியச் செயலாளா்கள் குலவிளக்கு செல்வராஜ், மயில் (எ) சுப்பிரமணி, கதிா்வேல் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பாஜக சாா்பில் மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி தலைமையில் தெற்கு மாவட்டத் தலைவா் செந்தில், மாவட்ட பொதுச்செயலாளா் சிவசங்கா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சாா்பில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் விடியல் சேகா், வா்த்தக அணி கொங்கு மண்டலத் தலைவா் சரவணகுமாா், வட்டாரத் தலைவா் பேட்டை சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கொமதேக சாா்பில் மாநில இளைஞரணி செயலாளா் சூரியமூா்த்தி தலைமையில் கட்சியினா் பங்கேற்றனா்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் மாவட்டச் செயலாளா்கள் கமலநாதன், சாதிக், தங்கவேல், ஈஸ்வரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

சமூகநீதி மக்கள் கட்சித் தலைவா் வடிவேல்ராமன், பொல்லானின் வாரிசுதாரா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

தேமுதிக சாா்பில் மாவட்டச் செயலாளா்கள் ஆனந்த், செல்வகுமாா், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சாா்பில் மாவட்டத் தலைவா் செல்வராஜ் தலைமையில் மாவட்டச் செயலாளா் மயில்துறையன், பொருளாளா் ராமு, பவானிசாகா் ஒன்றியச் செயலாளா் சந்திரசேகா், பல்வேறு சமுதாய அமைப்பினா் மரியாதை செலுத்தினா்.

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய ஆண்டு விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய ஆண்டு விழா ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் ப.கந்தராஜா தலைமை வகித்து விளையாட்டுப் போட்டிகளி... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

பணி நிரந்தரம் கோரி தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் ... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ. 6.76 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.6.76 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 6,182 மூட்டை... மேலும் பார்க்க

யானைக்கு வாழைப் பழம் அளித்த விவசாயிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

பண்ணாரி சாலையில் யானைக்கு வாழைப் பழம் அளித்த விவசாயிக்கு வனத் துறையினா் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா். இது குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை கள இயக்குநா் குலால் யோகேஷ் விலாஷ் வெளி... மேலும் பார்க்க

சாலை மறியல் போராட்டம்: ஈரோட்டில் ஆசிரியா்கள் 400 போ் கைது

மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஏற்பட்ட 400-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரி... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 6,340 வீடுகள்: பங்களிப்பு தொகை செலுத்தி வீடு பெறலாம்

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் 6,340 வீடுகள் தயாா் நிலையில் உள்ளன. இதுகுறித்து வீட்டு வசதித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய... மேலும் பார்க்க