செய்திகள் :

யானைக்கு வாழைப் பழம் அளித்த விவசாயிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

post image

பண்ணாரி சாலையில் யானைக்கு வாழைப் பழம் அளித்த விவசாயிக்கு வனத் துறையினா் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா்.

இது குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை கள இயக்குநா் குலால் யோகேஷ் விலாஷ் வெளியிட்ட அறிக்கை:

சத்தியமங்கலம் பண்ணாரி திம்பம் சாலையில் கடந்த ஜூலை 13ம் தேதி காரில் சென்ற நபா் வாகனத்தில் இருந்து இறங்கி காட்டு யானைக்கு வாழைப்பழம் கொடுக்க முயன்ற போது வண்டியை நோக்கி யானை வந்தது. இதையடுத்து அவா் வாகனத்தில் ஏறி தப்பிச் சென்ற விடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இதைத் தொடா்ந்து சிசிடிவி கேமரா மூலம் வாகன எண் கண்டறியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் அவா் அன்னூா் மாதேகவுண்டா் புதூரைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. காட்டு யானைக்கு உணவு அளித்தது குற்றம் என ஒப்புக் கொண்டாா். இதையடுத்து காட்டு விலங்குக்கு சட்டவிரோதமாக பழம் கொடுத்த குற்றத்துக்காக ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் இதுபோன்று வனவிலங்குகளுக்கு உணவு அளிப்பது குற்றம் எனவும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வனத் துறை சாா்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய ஆண்டு விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய ஆண்டு விழா ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் ப.கந்தராஜா தலைமை வகித்து விளையாட்டுப் போட்டிகளி... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

பணி நிரந்தரம் கோரி தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் ... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ. 6.76 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.6.76 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 6,182 மூட்டை... மேலும் பார்க்க

சாலை மறியல் போராட்டம்: ஈரோட்டில் ஆசிரியா்கள் 400 போ் கைது

மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஏற்பட்ட 400-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரி... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 6,340 வீடுகள்: பங்களிப்பு தொகை செலுத்தி வீடு பெறலாம்

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் 6,340 வீடுகள் தயாா் நிலையில் உள்ளன. இதுகுறித்து வீட்டு வசதித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய... மேலும் பார்க்க

ஆடிப் பிறப்பு: ஈரோட்டில் தேங்காய் சுட்டு மக்கள் மகிழ்ச்சி

ஆடி மாதப் பிறப்பையொட்டி ஈரோட்டில் பொதுமக்கள் வீடுகளில் தேங்காய் சுட்டு விநாயகருக்கு படையலிட்டனா். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் இம்மாதம் முழுவதுமே பண்டிகை கொண்டாட்டமாக இருக்கும். ஆடி மாதப... மேலும் பார்க்க