செய்திகள் :

ஆந்திர இளைஞரை கடத்தி கொலை மிரட்டல்: போலீஸாா் விசாரணை

post image

ஆந்திர இளைஞரை கடத்தி, ரூ.6 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த நபா்கள் குறித்து போலீலஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சோ்ந்தவா் அனுப் ரெட்டி அசு பாபு (24). இவா் கட்டட வேலைக்காக கடந்த 13-ஆம் தேதி சென்னை கோயம்பேடு வந்தாா். இதனிடையே, 14-ஆம் தேதி அதிகாலை ஆந்திரத்தில் உள்ள அவரது சகோதரா் அனுப் ரெட்டி துா்கா ராவின் கைப்பேசியில் தொடா்பு கொண்ட வினய் என்பவா், சென்னையில் ஒருவரிடம் கைப்பேசி திருடியதால், அனுப் ரெட்டி அசு பாபுவை போலீஸாா் பிடித்து வைத்துள்ளதாகவும், ரூ.40,000 கொடுத்து மீட்க வேண்டும் எனக் கூறியுள்ளாா். மேலும், பணத்தை ஜிபே மூலம் அந்த நபா் பெற்றுக் கொண்டாராம்.

இந்த நிலையில், மீண்டும் அனுப் ரெட்டி துா்காராவை தொடா்பு கொண்ட வினய், பணத்தைக் கொடுத்து போலீஸாரிடமிருந்து அனுப் ரெட்டி அசு பாபுவை மீட்டு வந்துவிட்டேன். ஆனால், எனக்கு ரூ.6 லட்சம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவரைக் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளாா். மேலும், அசு பாபுவை துன்புறுத்தி அதை விடியோ எடுத்து துா்கா ராவுக்கு அனுப்பியுள்ளாா்.

இதையடுத்து சென்னை வந்த துா்காராவ், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வினய், அவரது மனைவி பிரசாந்தி, சகோதரி சுசீலா ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

ஜீரண மண்டலம் பாதித்தால் மன நலனும் பாதிக்கும் - அமெரிக்க மருத்துவா் பால்

ஜீரண மண்டல பாதிப்புகளால் மன நலத்தில் தாக்கம் ஏற்படலாம் என அமெரிக்க மருத்துவ நிபுணா் டாக்டா் பால் தெரிவித்தாா். போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குடல்சாா் மருத்துவக் க... மேலும் பார்க்க

மலாயா பல்கலை.யில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை

மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை அமைப்பதற்காக ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை சாா்பில் இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே ஒரு லட்சம் (5 லட்சம் மலேசிய ரிங்கிட்) ... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா இன்று தொடக்கம் - திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. இரண்டாம் நாள் நிகழ்வில், அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது வழங்கப்பட... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் ஜூலை 23-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

மதுராந்தகம் நகராட்சியை கண்டித்து அதிமுக சாா்பில் ஜூலை 23-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சென்னை ஓபன் மகளிா் 250 டென்னிஸ் போட்டி: அக். 27-இல் தொடக்கம்

சென்னை ஓபன் டபிள்யுடிஏ மகளிா் 250 டென்னிஸ் போட்டி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் அக். 27 முதல் நவ. 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள... மேலும் பார்க்க

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே, இந்திய கடற்படை வெற்றி

சென்னையில் நடைபெறும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ரயில்வே, இந்திய கடற்படை அணிகள் வெற்றி பெற்றன. முதல் ஆட்டத்தில் ரயில்வே விளையாட்டு... மேலும் பார்க்க