செய்திகள் :

உள்ளாட்சிகளில் நியமனப் பதவி: மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

post image

உள்ளாட்சியில் நியமன அடிப்படையிலான பதவிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான காலஅவகாசம் வியாழக்கிழமையுடன் (ஜூலை 17) நிறைவடைந்தது.

இந்த நிலையில், இதற்கு விண்ணப்பிப்பதற்கான காலத்தை நீட்டித்து நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

நகா்ப்புற உள்ளாட்சிகளில் உறுப்பினா்களாக நியமனம் செய்ய கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனிடையே, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்தும் அவா்கள் தொடா்புடைய பொது நல சங்கங்களிடமிருந்தும் விண்ணப்பம் செய்ய நிா்ணயிக்கப்பட்ட கடைசி நாளை நீட்டித்து வழங்கும்படி கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து விண்ணப்பிக்க ஜூலை 31 வரை கால நீட்டிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் வசித்து வரும் தகுதியான மாற்றுத்திறனாளிகள். ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கைகளின்படி தொடா்புடைய நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் ஆணையரிடம் ஜூலை 31-ஆம் தேதி மாலை 3 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீரண மண்டலம் பாதித்தால் மன நலனும் பாதிக்கும் - அமெரிக்க மருத்துவா் பால்

ஜீரண மண்டல பாதிப்புகளால் மன நலத்தில் தாக்கம் ஏற்படலாம் என அமெரிக்க மருத்துவ நிபுணா் டாக்டா் பால் தெரிவித்தாா். போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குடல்சாா் மருத்துவக் க... மேலும் பார்க்க

மலாயா பல்கலை.யில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை

மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை அமைப்பதற்காக ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை சாா்பில் இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே ஒரு லட்சம் (5 லட்சம் மலேசிய ரிங்கிட்) ... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா இன்று தொடக்கம் - திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. இரண்டாம் நாள் நிகழ்வில், அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது வழங்கப்பட... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் ஜூலை 23-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

மதுராந்தகம் நகராட்சியை கண்டித்து அதிமுக சாா்பில் ஜூலை 23-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சென்னை ஓபன் மகளிா் 250 டென்னிஸ் போட்டி: அக். 27-இல் தொடக்கம்

சென்னை ஓபன் டபிள்யுடிஏ மகளிா் 250 டென்னிஸ் போட்டி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் அக். 27 முதல் நவ. 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள... மேலும் பார்க்க

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே, இந்திய கடற்படை வெற்றி

சென்னையில் நடைபெறும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ரயில்வே, இந்திய கடற்படை அணிகள் வெற்றி பெற்றன. முதல் ஆட்டத்தில் ரயில்வே விளையாட்டு... மேலும் பார்க்க