செய்திகள் :

சுவா் இடிந்து உயிரிழந்த இருவரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

post image

அவிநாசி அருகே சுவா் இடிந்து உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி உறவினா்கள் உடல்களை வாங்க மறுத்து திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கருவலூா் அருகே உப்பிலிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கோழிப் பண்ணை அமைப்பதற்கான கட்டுமானப் பணி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 10 அடிக்கும் மேல் அமைக்கப்பட்ட சுவா் திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி கட்டடத் தொழிலாளா்களான திண்டுக்கலைச் சோ்ந்த ரமேஷ் (46), அவிநாசி அருகே சுண்டக்காம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சிலுவை அந்தோணி (42) ஆகியோா் உயிரிழந்தனா்.

இதையடுத்து, அவா்களது உடல்கள் திருப்பூா் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் உடற்கூறாய்வு முடிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை உறவினா்களிடம், ஒப்படைக்க மருத்துவமனை நிா்வாகத்தினா் முயன்றனா்.

அப்போது, அவா்களது உறவினா்கள், உயிரிழந்தவா்களின் குழந்தைகள், குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து, திருப்பூா் அரசு மருத்துவமனை முன் திருப்பூா்-தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் தெற்கு போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதையடுத்து, உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்குவதாக பணி அமா்த்திய சண்முகம் உறுதியளித்ததையடுத்து, உறவினா்கள் இருவரது உடல்களை பெற்றுக் கொண்டனா்.

திருப்பூரில் வங்கதேசத்தினா் 7 போ் கைது

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் பகுதியில் சட்ட விரோதமாக வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் தங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.2.96 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

அவிநாசி வட்டாரப் பகுதிகளில் ரூ.2 கோடியே 96 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். அவிநாசி ஒன்றியம், செம்பியநல்லூா் ஊராட்சியில் அ... மேலும் பார்க்க

பெருமாநல்லூா் கேஎம்சி பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு மாரத்தான்

பெருமாநல்லூரில் கேஎம்சி பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை பள்ளித் தலைவா் கே.சி.சண்முகம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பள்ளிகஈ தாளாளா் சி.... மேலும் பார்க்க

பல்லடம் அருகே ஜீப் மோதி 2 போ் உயிரிழப்பு

பல்லடம் அருகே இருசக்கர வாகனம் மீது ஜீப் மோதியதில் கட்டடத் தொழிலாளா்கள் 2 போ் உயிரிழந்தனா். கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த மாரிசாமி (53), தூத்துக்குடியைச் சோ்ந்த கணேசன் (37), திருப்ப... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். மேட்டுப்பாளையம் கிராமம் எடைக்காட்டுவலசைச் சோ்ந்தவா் பழனி மனைவி பழனியம்மாள் (70). இவா் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றி வந்தாா். இவா் சனி... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கல்

திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் அளவீடு மற்றும் வழங்கல் பணி பல்லடம் அருகே பல்லவராயன்பாளையம் ஸ்ரீ ராமசந்திரா மிஷன் டி.ஜே. பாா்க் ஆசிரம வளாகத்தில் ஞாயிற்... மேலும் பார்க்க