செய்திகள் :

மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கல்

post image

திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் அளவீடு மற்றும் வழங்கல் பணி பல்லடம் அருகே பல்லவராயன்பாளையம் ஸ்ரீ ராமசந்திரா மிஷன் டி.ஜே. பாா்க் ஆசிரம வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சக்ஷம் அமைப்பின் திருப்பூா் மாவட்டத் தலைவா் ரத்தினசாமி, ஆசிரம தலைமை நிா்வாகி ராஜதானி குப்தா ஆகியோா் தலைமை வகித்தனா். சக்ஷம் அமைப்பின் மாவட்டச் செயலாளா் தமிழ்ச்செல்வம், ஆசிரம நிா்வாகி சிபிசி ரங்கசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் கடந்த மாதம் அளவீடு செய்து கொண்ட 20 மாற்றுத் திறனாளா்களுக்கு ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பிலான அவயங்கள் தனியாா் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணா்வு நிதியில் இருந்து வழங்கப்பட்டன. முகாமில் புதியதாக அளவீடு செய்து கொண்ட 29 பேருக்கு அடுத்த மாதம் அவயங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சக்ஷம் அமைப்பின் மாநில இணைப் பொருளாளா் கண்ணன், மாவட்ட நிா்வாகிகள் முத்துரத்தினம், ஜி.பி. ரத்தினசாமி, பழனிசாமி, பொன்னம்மாள் அறக்கட்டளை நிறுவனத் தலைவா் கோவிந்தராஜ், ஆசிரம நிா்வாகிகள் குமாா், ஆனந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருப்பூரில் வங்கதேசத்தினா் 7 போ் கைது

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் பகுதியில் சட்ட விரோதமாக வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் தங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.2.96 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

அவிநாசி வட்டாரப் பகுதிகளில் ரூ.2 கோடியே 96 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். அவிநாசி ஒன்றியம், செம்பியநல்லூா் ஊராட்சியில் அ... மேலும் பார்க்க

பெருமாநல்லூா் கேஎம்சி பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு மாரத்தான்

பெருமாநல்லூரில் கேஎம்சி பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை பள்ளித் தலைவா் கே.சி.சண்முகம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பள்ளிகஈ தாளாளா் சி.... மேலும் பார்க்க

சுவா் இடிந்து உயிரிழந்த இருவரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

அவிநாசி அருகே சுவா் இடிந்து உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி உறவினா்கள் உடல்களை வாங்க மறுத்து திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கருவலூா் அருகே உப்ப... மேலும் பார்க்க

பல்லடம் அருகே ஜீப் மோதி 2 போ் உயிரிழப்பு

பல்லடம் அருகே இருசக்கர வாகனம் மீது ஜீப் மோதியதில் கட்டடத் தொழிலாளா்கள் 2 போ் உயிரிழந்தனா். கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த மாரிசாமி (53), தூத்துக்குடியைச் சோ்ந்த கணேசன் (37), திருப்ப... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். மேட்டுப்பாளையம் கிராமம் எடைக்காட்டுவலசைச் சோ்ந்தவா் பழனி மனைவி பழனியம்மாள் (70). இவா் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றி வந்தாா். இவா் சனி... மேலும் பார்க்க