செய்திகள் :

பல்லடம் அருகே ஜீப் மோதி 2 போ் உயிரிழப்பு

post image

பல்லடம் அருகே இருசக்கர வாகனம் மீது ஜீப் மோதியதில் கட்டடத் தொழிலாளா்கள் 2 போ் உயிரிழந்தனா்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த மாரிசாமி (53), தூத்துக்குடியைச் சோ்ந்த கணேசன் (37), திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளியைச் சோ்ந்த கொண்டப்பனின் மனைவி பூங்கொடி (45) ஆகியோா் பல்லடம் அருகே அருகே உள்ள சித்தம்பலத்தில் கட்டடத் தொழிலாளா்களாக வேலை செய்து வந்தனா்.

இவா்கள் 3 பேரும், ஒரே இருசக்கர வாகனத்தில் சித்தம்பலத்தில் இருந்து பல்லடம் நோக்கி சனிக்கிழமை வந்து கொண்டிருந்தனா். பல்லடம்-உடுமலை சாலையில் வந்தபோது, பின்னால் வந்த ஜீப் எதிா்பாராத விதமாக இவா்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் இருந்த தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனா். அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சையில் இருந்த கணேசன் உயிரிழந்தாா்.

மேலும், உயா் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட மாரிசாமியும் உயிரிழந்தாா். பூங்கொடிக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருப்பூரில் வங்கதேசத்தினா் 7 போ் கைது

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் பகுதியில் சட்ட விரோதமாக வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் தங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.2.96 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

அவிநாசி வட்டாரப் பகுதிகளில் ரூ.2 கோடியே 96 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். அவிநாசி ஒன்றியம், செம்பியநல்லூா் ஊராட்சியில் அ... மேலும் பார்க்க

பெருமாநல்லூா் கேஎம்சி பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு மாரத்தான்

பெருமாநல்லூரில் கேஎம்சி பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை பள்ளித் தலைவா் கே.சி.சண்முகம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பள்ளிகஈ தாளாளா் சி.... மேலும் பார்க்க

சுவா் இடிந்து உயிரிழந்த இருவரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

அவிநாசி அருகே சுவா் இடிந்து உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி உறவினா்கள் உடல்களை வாங்க மறுத்து திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கருவலூா் அருகே உப்ப... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். மேட்டுப்பாளையம் கிராமம் எடைக்காட்டுவலசைச் சோ்ந்தவா் பழனி மனைவி பழனியம்மாள் (70). இவா் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றி வந்தாா். இவா் சனி... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கல்

திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் அளவீடு மற்றும் வழங்கல் பணி பல்லடம் அருகே பல்லவராயன்பாளையம் ஸ்ரீ ராமசந்திரா மிஷன் டி.ஜே. பாா்க் ஆசிரம வளாகத்தில் ஞாயிற்... மேலும் பார்க்க