செய்திகள் :

சூதாட்ட செயலி வழக்கு: தமிழகம் உள்பட பல மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை

post image

பண முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கிய சட்டவிரோத சூதாட்ட செயலி தொடா்பான வழக்கில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது.

‘பாரிமேட்ச்’ எனும் பெயரில் சூதாட்ட செயலியைச் சட்டவிரோதமாக நடத்தி, ரூ.2,000 கோடிக்கும் மேலாக மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மும்பை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்தனா். அதன் அடிப்படையில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை புதிய வழக்கைப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டது.

முதல்கட்ட விசாரணையில், பயனா்களிடமிருந்து மோசடி செய்யப்பட்ட பணம், போலி கணக்குகளுக்கு முதலில் மாற்றப்பட்டுள்ளது. பின்னா், அந்தப் பணம் பல்வேறு வழிகளில் சிக்கலான பரிவா்த்தனைகள் மூலம் மறைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

அதாவது, மோசடி பணம் தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏடிஎம்களில் இருந்து ரொக்கமாக எடுக்கப்பட்டுள்ளது; கிரிப்டோ வாலெட்டுகளுக்கு மாற்றப்பட்டுள்ளது; குறைந்த மதிப்புள்ள பல யுபிஐ பரிவா்த்தனைகள் மூலமாகவும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக மதுரை, மும்பை, தில்லி, ஹைதராபாத், ஜெய்பூா், சூரத் ஆகிய நகரங்களில் உள்ள 15 இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். இந்தச் சோதனைகளில் சில ஆவணங்கள், கைபேசிகள், கணினி சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு தெரிவித்தார்.திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழ... மேலும் பார்க்க

காவல்துறை குவிப்பு! போராட்டத்தைக் கைவிட தூய்மைப் பணியாளர்கள் மறுப்பு!! மீண்டும் பேச்சுவார்த்தை?

சென்னை: போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் போராட்டத்தைக் கைவிட அவர்கள் மறுத்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், போராடி வரும் தூய்... மேலும் பார்க்க

தேனி: பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் மாணவா் மரணம்!

ராயப்பன்பட்டியில் பள்ளி மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஈட்டி தலையில் பாய்ந்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவர் 6 நாள்களுக்குப் பின் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தில் பொய்ப் புகார் அளித்தால்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சென்னை: சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ-வின் கீழ் பொய்ப் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பாயும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போக்சோ சட்டத்தின் ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு!

சுதந்திர நாளையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த 13 நாள்களாக தொடர்ந்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகராட்சி மண்டலம் 5 மற்றும் 6-ஆவது பகுதி தூய்மைப் பணி த... மேலும் பார்க்க