செய்திகள் :

சூர்யகுமார், ஹாரிஸுக்கு 30% அபராதம்: எச்சரிக்கையுடன் தப்பினார் சாஹிப்ஜாதா

post image

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் ஆட்டங்களின்போது விதிகளை மீறிச் செயல்பட்டதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் பெளலர் ஹாரிஸ் ரெளஃப் ஆகியோருக்கு, ஆட்ட ஊதியத்தில் 30 சதவீதத்தை ஐசிசி அபராதம் விதித்தது.

கடந்த 14-ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான குரூப் சுற்று ஆட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு துணை நிற்பதாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினருக்கு அர்ப்பணிப்பதாகவும் கூறினார்.

இது அரசியல் ரீதியிலான கருத்து என்று கூறி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு எதிராக ஐசிசியிடம் புகார் அளித்தது. அதுதொடர்பாக சூர்யகுமாரிடம் வியாழக்கிழமை விசாரித்த ஐசிசி போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன், இதுபோன்ற அரசியல் ரீதியிலான கருத்துகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தினார்.

எனினும் சூர்யகுமாரின் நடத்தைக்காக அவருக்கு, சம்பந்தப்பட்ட ஆட்டத்தின் ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்படது.

ஹாரிஸுக்கும் அபராதம்:

கடந்த 21-ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தின்போது, அரை சதம் அடித்த பாகிஸ்தானின் சாஹிப்ஜாதா ஃபர்ஹான், தனது பேட்டை வைத்து துப்பாக்கியால் சுடுவது போன்று கொண்டாடினார்.

ஃபீல்டிங் செய்த பெளலர் ஹாரிஸ் ரெளஃப், ஆபரேஷன் சிந்தூரின்போது 6 இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் பொய்யாகக் கூறியதை குறிப்பிடும் வகையில் இந்திய ரசிகர்களை நோக்கி செய்கைகள் காட்டினார்.

இருவரின் செயலும் ஆத்திரத்தை தூண்டும் வகையில் இருப்பதாக ஐசிசியிடம், பிசிசிஐ புகார் அளித்தது. அவர்கள் இருவரிடமும் ஐசிசி போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டார். அப்போது தாங்கள் தவறாக ஏதும் செய்யவில்லை என்று அவர்கள் எழுத்து பூர்வமாக பதிலளித்தனர்.

இருப்பினும், ஹாரிஸுக்கு ஆட்ட ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதித்த நடுவர் ரிச்சர்ட்சன், சாஹிப்ஜாதாவுக்கு எச்சரிக்கை மட்டும் வழங்கினார்.

ஷாருக்கானை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் ஷாருக்கனை இயக்கியுள்ளார். ஜவான், டங்கி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் தற்போது கிங் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆக்சன் படமாக இது உர... மேலும் பார்க்க

தினேஷ் பிறந்த நாள்... வேட்டுவம் கிளிம்ஸ் வெளியீடு!

வேட்டுவம் திரைப்படத்தின் சிறப்பு கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.நடிகர் அட்டகத்தி தினேஷ் தன் பெயரை வி. ஆர். தினேஷ் என மாற்றியுள்ளார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான தண்டகாரண்யம் திரைப்படம் நல்ல வரவே... மேலும் பார்க்க

வேடுவன் டிரைலர்!

நடிகர் கண்ணா ரவி நடித்த வேடுவன் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. கைதி, லவ்வர் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கண்ணா ரவி. முழு கமர்சியல் கதைகளைத் தாண்டி ரத்தசாட்சி போன்ற சமூக ரீதியான கதையையும் தேர... மேலும் பார்க்க

சினிமா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது: விக்ரம் பிரபு

நடிகர் விக்ரம் பிரபு கலைமாமணி விருது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகர் விக்ரம் பிரபு உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்குத் தேர்வான பலரும் தங்கள் ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஸ்ரீ மாரியம்மனுக்கு புதிய ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம்!

காஞ்சிபுரம் கணேஷ் நகரில் அமைந்துள்ள தும்பவனம் மாரியம்மனுக்கு நவராத்திரி விழாவையொட்டி புதிய ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு சனிக்கிழமை சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.காஞ்சிபுரம் மாநகராட்சி 48வது... மேலும் பார்க்க

இவை ஏஐ புகைப்படங்கள் அல்ல: சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படங்கள் அடங்கிய விடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அந்தப் பதிவில் இவையெல்லாம் ஏஐ-ஆல் உருவாக்கப்பட்டவை அல்ல, நிஜமான புகைப்படங்கள் என்று விளக்கம் அளித்... மேலும் பார்க்க