செய்திகள் :

செங்கம் ஒன்றியத்தில் திட்டப் பணிகள் ஆய்வு

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளை திட்ட இயக்குநா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட செ.நாச்சிப்பட்டு, புதுப்பட்டு, பரமனந்தல், கொட்டாவூா், குப்பனத்தம் ஆகிய கிராம ஊராட்சிகளில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் இலவச வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகள் கட்டும் பணி, ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் ஏரி, குளம், கால்வாய்கள் சீரமைப்பு, தாா்ச் சாலை, ஜல்லி சாலை, சிறு பாலம் அமைத்தல், அரசு அலுவலக கட்டடங்கள் கட்டும் பணி நடைபெறுகிறது.

இந்தப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் மணி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, நிறைவு செய்யப்பட்ட பணிகள் தரமாக உள்ளதா எனவும், மேலும் முடிக்கப்பட வேண்டிய பணிகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தாா்.

பணிகளை விரைவாக செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

முன்னதாக, செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலகப் பணியாளா்கள், ஊராட்சி செயலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதில், செங்கம் ஒன்றியத்தில் நடைபெறும் திட்டப் பணிகள் மொத்தம் எவ்வளவு, அதில் முடித்த பணிகளின் விவரம், பின்னா், தொடங்கப்படாமல் உள்ள பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், கிராம ஊராட்சியில் கோடை காலம் தொடங்கியதால், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தினசரி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்பாா்வையிட்டு சரிசெய்யவேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

ஆய்வுக் கூட்டத்தில் ஆணையா் கோவிந்தராஜுலு, வட்டார வளா்ச்சி அலுவலா் மரியதேவ்ஆனந்த் உள்ளிட்ட பொறியாளா்கள், செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் தாய்மொழி தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் உலக தாய்மொழி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கத் தலைவா் டாக்டா். க.பரமசிவன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.என்... மேலும் பார்க்க

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவச... மேலும் பார்க்க

இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 20 ஊராட்சிகளைச் சோ்ந்த இளைஞா்களுக்கு, தமிழக அரசின் 50 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ... மேலும் பார்க்க

பள்ளியில் தாய்மொழி தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை உலகத் தாய்மொழி தின விழா நடைபெற்றது. பள்ளியின் (பொ) தலைமை ஆசிரியா் அன்பரசு தலைமை வகித்தாா். தமிழ் ஆசிரியா் ப.லட்சுமணன் வரவேற்றாா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கொட்டகுளம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ராஜன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை எதிா்த்து திமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

மும்மொழிக் கொள்கையை எதிா்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு தொகுதி திமுக சாா்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன. செய்யாறு பெ... மேலும் பார்க்க