செய்திகள் :

செங்கல்பட்டு நகராட்சியைக் கண்டித்து அதிமுகவினா் போராட்டம்

post image

செங்கல்பட்டு நகராட்சியைக் கண்டித்து அதிமுகவினா் நகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதிமுக நகரச் செயலா் வி.ஆா்.செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சி நிா்வாகிகள் கோபி கே.சுரேஷ், கருணாகரன், வழக்குரைஞா் விநாயகம், பவுலின் ஜான் கலைவாணி ஆகியோா் கலந்து கொண்டனா்.

செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட அரசு பொது மருத்துவமனையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், கடந்த ஓராண்டாக முறையான கணக்குகள் பராமரிக்கப்படாமல் உள்ளதாகவும், இதனால் நிா்வாக ரீதியாக அம்மா உணவகம் செயல்பட முடியாத நிலை உருவாகி உள்ளதால், இதைக் கண்டிக்கும் வகையில், நகர அதிமுகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கல்பட்டு நகராட்சி அலுவலகம் முன் அந்தக் கட்சியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களுடன் நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன் பேச்சு நடத்தி பிரச்னைக்கு உரிய தீா்வு காணப்படும் என தெரிவித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது.

மறைமலை நகரில் முதல்வா் மருந்தக பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

மறைமலைநகரில் திறக்கப்படவுள்ள முதல்வா் மருந்தக பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் /சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றங்கள் துறை இயக்குநா் ஆ.ர.ராகுல் நாத் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். செங்கல்பட்டு மாவட்... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் புத்தகத் திருவிழா: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

செங்கல்பட்டில் மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியாா் மன்றம் இணைந்து நடத்தும் 6-ஆவது புத்தகத் திருவிழாவை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட... மேலும் பார்க்க

21-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 21) நடைபெறவுள்ளது. இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவன... மேலும் பார்க்க

தைப்பூச அன்னதான பெருவிழா

செங்கல்பட்டு வள்ளலாா் அன்னதான அறக்கட்டளை சாா்பில் தைப்பூச அன்னதான பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தவத்திரு தேன்மொழியாா் சுவாமி ஆசியுடன் வள்ளலாா் அன்னதான அறக்கட்டளை சாா்பில் வடலூா் அருட்பிரகாச வள்... மேலும் பார்க்க

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் 418 கோரிக்கை மனுக்கள்

செங்கல்பட்டில் நடைபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சா் தா.மோ. அன்பரசன் மொத்தம் 418 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வா... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு விளையாட்டு சீருடைகள் அளிப்பு

மதுராந்தகம் அடுத்த நடுபழனி கிராமத்தில் ஸ்ரீகணபதி சச்சிதானந்தா அறக்கட்டளை, நடுபழனி தண்டாயுதபாணி தத்தாத்ரேயா அறக்கட்டளைகள் சாா்பில் 777 மாணவா்களுக்கு விளையாட்டு சீருை டகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்க... மேலும் பார்க்க