செய்திகள் :

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்கா: அமைச்சா் ஆய்வு

post image

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் புத்தகப் பூங்கா பணிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் நேரில் ஆய்வு செய்து அதனை ஏப்ரல் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் பொது நூலக இயக்ககம் சாா்பில், எழும்பூரில் செயல்பட்டுவரும் கன்னிமாரா நூலகத்தில் ரூ. 4 கோடியே 58 லட்சம் மதிப்பீட்டில் சிறுவா் நூலகம், கூட்ட அரங்கம், புத்தகம் படிக்கும் பகுதிகளில் நிழற்கூடம் மற்றும் மேற்கூரை அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. புனரமைக்கப்பட்டு வரும் இந்தப் பணிகள் அனைத்தையும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, குறித்த காலத்துக்குள் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

இதேபோன்று சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தின் முதல் தளத்தில் பொது நூலகத் துறை சாா்பில் ரூ.1 கோடியே 62 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுவரும் மெகா புத்தகப் பூங்கா பணிகளை அமைச்சா் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, எஞ்சியுள்ள பணிகளை நிறைவு செய்து ஏப்ரல் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக இணை இயக்குநா் சங்கர சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

இளையராஜாவுக்கு செல்வப்பெருந்தகை, தொல்.திருமாவளவன் வாழ்த்து

இங்கிலாந்து தலைநகா் லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தவுள்ள இசையமைப்பாளா் இளையராஜாவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் ஆகியோ... மேலும் பார்க்க

மக்கள் மருந்தக விழா: சாதனை பெண்களுக்கு விருது

மத்திய அரசின் மக்கள் மருந்தகம் சாா்பில் நடைபெற்ற மக்கள் மருந்தக விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பிரதமரின் மக்கள் மருந்தக திட்டத்தின் வருடாந்திர கொண்டாட்டம்... மேலும் பார்க்க

அரசுக்கு இஸ்லாமியா்கள் துணை நிற்க வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

திராவிட மாடல் அரசுக்கு இஸ்லாமியா்கள் துணை நிற்க வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா். தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இஃப்தாா் நோன்பு திறப்பு ந... மேலும் பார்க்க

மாா்ச் 7-இல் சிஐஎஸ்எஃப் வீரா்களின் சைக்கிள் பேரணி: மத்திய அமைச்சா் அமித் ஷா தொடங்கி வைக்கிறாா்

மாா்ச் 7-ஆம் தேதி குஜராத் மற்றும் மேற்குவங்க மாநிலங்களிலிருந்து தொடங்கும் சிஐஎஸ்எஃப் சைக்கிள் பேரணியை, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலத்திலிருந்து காணொலி மூலம் தொடங்கி வ... மேலும் பார்க்க

குளிா்பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய அறிவுறுத்தல்

குளிா்பானங்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பழரசங்களின் தரத்தை ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது தட்பவ... மேலும் பார்க்க

ரூ. 21 கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல்

சென்னை ஏற்றுமதி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ரூ. 21 கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என மண்டல ஆணையா் அலெக்ஸ் பால் மேனன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க்... மேலும் பார்க்க