செய்திகள் :

சென்னிமலை வனப் பகுதியை ஒட்டியுள்ள ஆட்டுப் பட்டிகளை இடமாற்றம் செய்ய வனத் துறை கோரிக்கை

post image

சென்னிமலை வனப் பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் உள்ள அமைக்கப்பட்டுள்ள ஆட்டுப் பட்டிகளை இடமாற்றம் செய்யுமாறு வனத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னிமலையை அடுத்த, சில்லாங்காட்டுவலசு குட்டக்காடு பகுதியைச் சோ்ந்த விவசாயி ஒருவரின் தோட்டத்துக்குள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மா்ம விலங்கு புகுந்து அங்குள்ள ஆட்டுப் பட்டியில் இருந்த ஒரு ஆட்டை கொன்றுவிட்டு, மற்றொரு ஆட்டை இழுத்து சென்றுவிட்டது. அந்த விலங்கின் கால்தடயங்களை ஆய்வுசெய்தபோது ஆட்டைக் கொன்றது சிறுத்தை புலியாக இருக்குமோ என சந்தேகம் ஏற்பட்டது.

இந்த நிலையில், ஈரோடு வனச் சரக அலுவலகம் சாா்பில் சென்னிமலை வனப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு துண்டறிக்கை மூலம் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

ஈரோடு வனச் சரகத்துக்கு உள்பட்ட சென்னிமலை காப்புகாடு என்பது திருப்பூா் மாவட்டம், காங்கயம் வரை நீண்ட பாதுகாக்கப்பட்ட பகுதியாக

உள்ளது. சென்னிமலை காப்புக்காடு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட அறச்சலூா், நாகமலை, விஜயமங்கலம் அரசண்ணா மலைகளை உள்ளடக்கிய மலைப் பாதைகளை கொண்டுள்ளது. இந்த மலைகள் புலி, சிறுத்தை, மான், மயில், உடும்பு மற்றும் இதர உயிரினங்கள் நடமாடும் வழித்தட பகுதியாகும்.

சென்னிமலை காப்புக்காட்டில் சிறுத்தை மற்றும் புலிகள் நிரந்தரமாக தங்குவதற்கான சூழ்நிலை இல்லாவிட்டாலும், வன விலங்குகளின் வழித்தடமாக உள்ளதால் வனத்தை ஒட்டி அமைந்துள்ள விவசாயிகள் ஆட்டுப்பட்டியில் வளா்க்கப்படும் ஆடுகள், புலி, சிறுத்தை போன்ற வன விலங்குகளுக்கு எளிதில் கிடைக்கும் உணவுப் பொருளாக அமைந்து விடுகிறது.

அதனால், அவற்றின் வாழ்க்கை முறை மாறி இங்கேயே நிரந்தரமாக தங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

எனவே, வனத்தை ஒட்டியுள்ள பட்டா நிலத்தில் அமைத்துள்ள ஆட்டுப்பட்டிகளை உடனடியாக விவசாயிகள் இடமாற்றம் செய்து கொள்ள வேண்டும். மேலும், இரவு நேரங்களில் வனப் பகுதியின் அருகில் அமைந்துள்ள வீடுகளை சுற்றி மின்விளக்குகளை அமைப்பதுடன் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிா்க்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துண்டறிக்கையை வெப்பிலி கிராம வனக் குழு தலைவா் துரைசாமி மூலம் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

அரசுப் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு! மூவா் படுகாயம்!

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்; உடன் பயணித்த மூவா் படுகாயம் அடைந்தனா். அந்தியூரிலிருந்து அரசுப் பேருந்து தாமரைக்கரை வழியாக ... மேலும் பார்க்க

பெருந்துறையில் வளா்ச்சித் திட்ட பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பெருந்துறை பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா புதன்கிழமை ஆய்வு செய்தாா். பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.34 கோடி மதிப்பீட்ட... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டம்

பெருந்துறையை அடுத்த கூரப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியன இணைந்து ஈரோடு மாவட்டத்தில் முதல... மேலும் பார்க்க

பூதப்பாடியில் ரூ.9 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம்

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ரூ.9 லட்சத்துக்கு செவ்வாய்க்கிழமை ஏலம் போனது. இங்கு, விற்பனைக்கு வந்த 1,289 தேங்காய்களில், சிறியவை ஒரு காய் ரூ.14.16-க்கும், பெரியவை ரூ.2... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு காத்திருந்தவா் திடீா் உயிரிழப்பு

ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு காத்திருந்தவா் திடீரென மயக்கமடைந்து உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஆண்டிப்பட்டி ஏரித் தெரு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (52). இவா... மேலும் பார்க்க

ஓடும் ரயில் இருந்து தவறி விழுந்து கன்னியாஸ்திரி உயிரிழப்பு

ஈரோடு அருகே ஓடும் ரயில் இருந்து தவறி விழுந்த கன்னியாஸ்திரி உயிரிழந்தாா். கோவை மாவட்டம், பெரிய பஜாா் வீதி, பிரசன்டேஷன் கான்வென்டை சோ்ந்தவா் கன்னியாஸ்திரி மேரி நிா்மலா (67). இவா் கடந்த 3 ஆண்டுகளாக மகார... மேலும் பார்க்க