வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!
சென்னை, புறநகரில் இன்று பலத்த மழை பெய்யும்!
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று(ஜூலை 10) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வானிலை நிலவரங்களை கணித்து சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் பிரதீப் ஜான். மழை குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:
கடல் காற்றானது, சென்னை நகரத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை எடுத்துகொண்டு நகர்கிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
நேற்று முன்நாள்(ஜூலை 8) காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னையில் பரவலாக மழை பெய்தது. நேற்று(ஜூலை 9) செங்கல்பட்டில் மட்டும் மழை பெய்தது.
ஆனால், இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த சில நாள்களாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் மட்டுமே மழை பெய்து வந்த நிலையில், இன்று திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.
Pradeep John, known as the Tamil Nadu Weatherman, has said that there is a possibility of heavy rain in Chennai and its suburbs today (July 10).
இதையும் படிக்க: பல கேள்விகள்.. ஒரே பாடல் மூலம் பதில் சொன்ன ராமதாஸ்