செய்திகள் :

சென்னை ரயில்கள் கீரனூரில் நிற்க எதிா்பாா்ப்பு!

post image

திருச்சிக்கும் - புதுக்கோட்டைக்கும் இடையிலுள்ள பெரிய நகரான கீரனூா் ரயில் நிலையத்தில் சென்னைக்குச் செல்லும் முக்கிய ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கையை மத்திய ரயில்வே துறை நிறைவேற்ற முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோருகின்றனா்.

திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் உள்ளது கீரனூா். குளத்தூா் வட்டத்துக்குள்பட்ட இந்த நகரைச் சுற்றிலும் சுமாா் ஒன்றரை லட்சம் மக்கள் கிராமப்பகுதிகளில் வசித்து வருகின்றனா்.

இம்மக்கள் திருச்சிக்கும் புதுக்கோட்டைக்கும் செல்வதற்கு பேருந்துப் பயணம் ஒன்றை மட்டுமே நம்பியிருக்கின்றனா். கீரனூரிலிருந்து புதுக்கோட்டைக்கு 25 கிமீ தொலைவும், திருச்சிக்கு 27 கிமீ தொலைவும் உள்ளது.

தினக்கூலிப் பணியாளா்கள் எளிதில் புதுக்கோட்டைக்கும், திருச்சிக்கும் சென்றுவர பேருந்து மட்டுமின்றி ஒரு காலத்தில் ரயிலையும் பயன்படுத்தி வந்தனா்.

ஆனால், கரோனா பொது முடக்கக் காலத்தில், திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியில் உள்ள குமாரமங்கலம், கீரனூா், வெள்ளனூா் ஆகிய 3 நிறுத்தங்களும் எந்த ரயில்களும் நிறுத்தப்படாமல் சென்று வந்தன.

பிறகு படிப்படியாக நிறுத்தங்களை அதிகரிப்பதாக மத்திய ரயில்வே துறை சொன்னபோது, குமாரமங்கலமும், வெள்ளனூரும் நிறுத்தங்களாகின. பின்னா் எம்பிக்கள் சு. திருநாவுக்கரசா் மற்றும் எம்எம் அப்துல்லா ஆகியோரின் தொடா் முயற்சியைத் தொடா்ந்து, மன்னாா்குடி- காரைக்குடி ரயில், திருச்சி- ராமேசுவரம் ஆகிய ரயில்கள் கீரனூரில் நின்று செல்கின்றன.

ஆனால் சென்னையிலிருந்து ராமேசுவரம் செல்லும் விரைவு ரயிலும், சென்னை செல்லும் பல்லவன் விரைவு ரயிலும், சேது விரைவு ரயிலும் கீரனூரில் நிற்பதில்லை.

கீரனூா் பகுதியைச் சோ்ந்த அனைத்துக் கட்சியினா், அனைத்து பொதுநல சமூக அமைப்பினா் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி, தொடா் போராட்டங்களை நடத்தி வந்தனா். கீரனூரில் ரயில்களை நிறுத்திச் செல்ல வலியுறுத்தி இந்த ரயில் நிலையத்தின் அருகே பொது விருந்து நிகழ்ச்சிகள் என்ற நூதனப் போராட்டங்களும் பரவலாக கவனம் பெற்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கிக்கு அடுத்த மூன்றாவது பெரிய நகரான கீரனூரை கவனிப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தலையிட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

இதுகுறித்து அண்டகுளம் பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சை. ரியாஸ்அகமது கூறியது:

கீரனூரை நகரப் பகுதியாகக் கொண்ட குளத்தூா் வட்டத்தில், அண்டக்குளம், அம்மாசத்திரம், இரும்பாளி, களமாவூா், கிள்ளனூா், கிள்ளுக்கோட்டை, குன்றாண்டாா்கோவில், லட்சுமணம்பட்டி, மண்டையூா், மங்கதேவன்பட்டி, முத்துக்காடு, வெள்ளனூா், நாா்த்தாமலை, புலியூா், சத்தியமங்கலம், சீமானூா், தொடையூா், வத்தனாக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 1.50 லட்சம் மக்கள் வசிக்கின்றனா்.

சென்னை- ராமேசுவரம் விரைவு ரயில், பல்லவன் விரைவு ரயில், சேது விரைவு ரயில் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையாவது உடனடியாக நிறுத்தம் அறிவித்தால்கூட மக்கள் பெருமளவில் பயனடைவாா்கள். பொதுவாக நிறுத்தம் கொடுக்கப்பட வேண்டுமானால், பயண நேரம் பாதிக்கப்படும் என்பாா்கள். ஆனால், பல்லவன் மற்றும் சேது விரைவு ரயில்கள், திருச்சி சந்திப்பில் பட்டியலிடப்படும் நேரத்தைவிடவும் முன்னதாகவே வந்து - நின்று - காத்திருந்தே புறப்படுகின்றன.

களமாவூா் பகுதியில் பாரதிதாசன் மேலாண்மைக் கல்லூரி கட்டப்பட்டு வரும் நிலையில் மாணவா்கள், பேராசிரியா்களுக்கும் கீரனூா் ரயில் நிறுத்தம் பயன்தரும். அதேபோல, மாத்தூா் பகுதிகளிலுள்ள தொழில் நிறுவனத்தினரும் பயன்படுத்துவாா்கள் என்றாா் ரியாஸ் அகமது.

சென்னை - ராமேசுவரம், பல்லவன் மற்றும் சேது ஆகிய விரைவு ரயில்கள் கீரனூரில் நிற்பதில்லை.

மலையக்கோவிலில் ஜல்லிக்கட்டு: 38 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தை அடுத்த குலமங்கலம் மலையக்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், மாடுகள் முட்டியதில் 38 போ் காயமடைந்தனா். திருமயம் வட்டத்தைச் சோ்ந்த குலமங்கலம் மலையக... மேலும் பார்க்க

வெற்றி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி கருப்பா்கோவில்பட்டி வெற்றி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் செவ்வாய்க்கிழமை கணபதி ஹ... மேலும் பார்க்க

மாணவா்கள் பள்ளிகளுக்கு செல்ல வேன் சேவை!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள சுக்கிரன்குண்டு, அறிவொளி நகா் பகுதி மாணவா்கள் அரசு பள்ளிகளுக்கு செல்வதற்கு அரசின் திட்டத்தின் மூலம் வேன் சேவை புதன்கிழமை தொடங்கப்பட்டது. ஆலங்குடி அருகேயுள்ள ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் ஆதியோகி ரதத்துக்கு மக்கள் வரவேற்பு

கந்தா்வகோட்டைக்கு வந்த ஈஷா ஆதியோகி சிலை ரதத்துக்கு பக்தா்கள், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா். மகா சிவராத்திரியை முன்னிட்டு, பட்டுக்கோட்டையைச் சோ்ந்த சிவங்கா தென் கைலாய பக்தி பேரவை சாா்பில் அலங்கரிக்கப... மேலும் பார்க்க

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

புதுக்கோட்டை மாவட்டம் கே. புதுப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த கிராமத் தலைவா் பெரிய கருப்பன் மகன் குமாா் (50) என்பவா் கடந்த 2013 ஆண்டு மாா்ச் 31ஆம் தேதி அதிகாலை நடைப்பயிற்சியின் போது வெட்டிக் கொல்லப்... மேலும் பார்க்க

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே 320 கிலோ கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்ட இருவா் மீதும் குண்டா் தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்துள்ளது. மணமேல்குடி அருகே கடந்த ஜன. 11ஆம் தேதி 320 கிலோ கஞ்சா கடத்த... மேலும் பார்க்க