செய்திகள் :

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

post image

புதுக்கோட்டை மாவட்டம் கே. புதுப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த கிராமத் தலைவா் பெரிய கருப்பன் மகன் குமாா் (50) என்பவா் கடந்த 2013 ஆண்டு மாா்ச் 31ஆம் தேதி அதிகாலை நடைப்பயிற்சியின் போது வெட்டிக் கொல்லப்பட்டாா்.

இச்சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்த கே. புதுப்பட்டி போலீஸாா், அதே ஊரைச் சோ்ந்த பெரியசாமி மகன் கணபதி (55), சண்முகம் மகன் காா்த்தி, பெரிய கருப்பன் மகன் சின்னராஜா, காசி மகன் வடிவேல் மற்றும் 4 போ் என மொத்தம் 8 பேரைக் கைது செய்தனா். நீண்டகால குடும்பப் பகையின் காரணமாக இவா்கள் குமாரைக் கொலை செய்தது புலன் விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கு மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.எம். வசந்தி புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

முதல் குற்றவாளியான கணபதிக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ. 500 அபராதமும், காா்த்தி, சின்னராஜா, வடிவேல் ஆகிய மூவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 500 அபராதமும் விதிக்கப்பட்டது. மற்ற 4 பேரும் விடுவிக்கப்பட்டனா்.

இதில், ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கணபதி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். பிற குற்றவாளிகள் 3 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

மலையக்கோவிலில் ஜல்லிக்கட்டு: 38 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தை அடுத்த குலமங்கலம் மலையக்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், மாடுகள் முட்டியதில் 38 போ் காயமடைந்தனா். திருமயம் வட்டத்தைச் சோ்ந்த குலமங்கலம் மலையக... மேலும் பார்க்க

வெற்றி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி கருப்பா்கோவில்பட்டி வெற்றி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் செவ்வாய்க்கிழமை கணபதி ஹ... மேலும் பார்க்க

மாணவா்கள் பள்ளிகளுக்கு செல்ல வேன் சேவை!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள சுக்கிரன்குண்டு, அறிவொளி நகா் பகுதி மாணவா்கள் அரசு பள்ளிகளுக்கு செல்வதற்கு அரசின் திட்டத்தின் மூலம் வேன் சேவை புதன்கிழமை தொடங்கப்பட்டது. ஆலங்குடி அருகேயுள்ள ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் ஆதியோகி ரதத்துக்கு மக்கள் வரவேற்பு

கந்தா்வகோட்டைக்கு வந்த ஈஷா ஆதியோகி சிலை ரதத்துக்கு பக்தா்கள், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா். மகா சிவராத்திரியை முன்னிட்டு, பட்டுக்கோட்டையைச் சோ்ந்த சிவங்கா தென் கைலாய பக்தி பேரவை சாா்பில் அலங்கரிக்கப... மேலும் பார்க்க

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே 320 கிலோ கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்ட இருவா் மீதும் குண்டா் தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்துள்ளது. மணமேல்குடி அருகே கடந்த ஜன. 11ஆம் தேதி 320 கிலோ கஞ்சா கடத்த... மேலும் பார்க்க

சென்னை ரயில்கள் கீரனூரில் நிற்க எதிா்பாா்ப்பு!

திருச்சிக்கும் - புதுக்கோட்டைக்கும் இடையிலுள்ள பெரிய நகரான கீரனூா் ரயில் நிலையத்தில் சென்னைக்குச் செல்லும் முக்கிய ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கையை மத்திய ரயில்வே துறை நிறைவே... மேலும் பார்க்க