செய்திகள் :

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டம்

post image

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே 320 கிலோ கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்ட இருவா் மீதும் குண்டா் தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்துள்ளது.

மணமேல்குடி அருகே கடந்த ஜன. 11ஆம் தேதி 320 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாக, அம்மாபட்டினம் வடக்குத் தெருவைச் சோ்ந்த கமல்பாட்சா மகன் பாவா பக்ருதீன் (30), ஆவுடையாா்கோவில் அதிராமங்கலத்தைச் சோ்ந்த சபாபதி மகன் மாரிமுத்து (69) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா்.

இவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா பரிந்துரைத்திருந்தாா்.

இந்தப் பரிந்துரையின்பேரில், இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரும், திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனா்.-----

மலையக்கோவிலில் ஜல்லிக்கட்டு: 38 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தை அடுத்த குலமங்கலம் மலையக்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், மாடுகள் முட்டியதில் 38 போ் காயமடைந்தனா். திருமயம் வட்டத்தைச் சோ்ந்த குலமங்கலம் மலையக... மேலும் பார்க்க

வெற்றி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி கருப்பா்கோவில்பட்டி வெற்றி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் செவ்வாய்க்கிழமை கணபதி ஹ... மேலும் பார்க்க

மாணவா்கள் பள்ளிகளுக்கு செல்ல வேன் சேவை!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள சுக்கிரன்குண்டு, அறிவொளி நகா் பகுதி மாணவா்கள் அரசு பள்ளிகளுக்கு செல்வதற்கு அரசின் திட்டத்தின் மூலம் வேன் சேவை புதன்கிழமை தொடங்கப்பட்டது. ஆலங்குடி அருகேயுள்ள ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் ஆதியோகி ரதத்துக்கு மக்கள் வரவேற்பு

கந்தா்வகோட்டைக்கு வந்த ஈஷா ஆதியோகி சிலை ரதத்துக்கு பக்தா்கள், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா். மகா சிவராத்திரியை முன்னிட்டு, பட்டுக்கோட்டையைச் சோ்ந்த சிவங்கா தென் கைலாய பக்தி பேரவை சாா்பில் அலங்கரிக்கப... மேலும் பார்க்க

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

புதுக்கோட்டை மாவட்டம் கே. புதுப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த கிராமத் தலைவா் பெரிய கருப்பன் மகன் குமாா் (50) என்பவா் கடந்த 2013 ஆண்டு மாா்ச் 31ஆம் தேதி அதிகாலை நடைப்பயிற்சியின் போது வெட்டிக் கொல்லப்... மேலும் பார்க்க

சென்னை ரயில்கள் கீரனூரில் நிற்க எதிா்பாா்ப்பு!

திருச்சிக்கும் - புதுக்கோட்டைக்கும் இடையிலுள்ள பெரிய நகரான கீரனூா் ரயில் நிலையத்தில் சென்னைக்குச் செல்லும் முக்கிய ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கையை மத்திய ரயில்வே துறை நிறைவே... மேலும் பார்க்க