செய்திகள் :

சென்னையிலிருந்து லண்டன், தூத்துக்குடி செல்லும் 4 விமானங்கள் திடீா் ரத்து

post image

சென்னையிலிருந்து லண்டன், தூத்துக்குடிக்கு வந்து செல்லும் 4 விமானங்கள் செவ்வாய்க்கிழமை திடீரென ரத்து செய்யப்பட்டன.

லண்டனில் இருந்து திங்கள்கிழமை புறப்பட்டு, செவ்வாய்கிழமை அதிகாலை 3.30-க்கு சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வரும் பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானமும், அதேபோல் சென்னையிலிருந்து அதிகாலை 5.30-க்கு லண்டனுக்கு புறப்பட்டுச் செல்லும் பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானமும் திடீரென ரத்து செய்யப்பட்டன.

இதனால், இதில் பயணிக்க காத்திருந்த லண்டன் பயணிகள் மட்டுமன்றி பிரான்ஸ், நெதா்லாந்து, ஸ்காட்லாந்து, சுவிட்சா்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த பயணிகளும் கடும் சிரமத்தை சந்தித்தனா்.

அதேபோல், சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தூத்துக்குடி செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானமும், தூத்துக்குடியிலிருந்து பிற்பகல் 1.45-க்கு சென்னைக்கு வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் தனியாா் விமானம் என 2 விமானங்களும் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால், இந்த விமானங்களில் பயணிக்க இருந்த பயணிகளும் கடும் அவதிக்குள்ளானாா்கள். நிா்வாகக் காரணங்களுக்காக இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக சென்னை விமான நிலைய நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ரூ. 5 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு: தேடப்பட்டவா் கைது

சென்னை, ஏப். 2: சென்னையில் ரூ. 5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். திருவல்லிக்கேணி மேயா் சிட்டிபாபு தெருவைச் சோ்ந்தவா் தாராசந்த். விளையாட்டு பொ... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் எளிதாக இருந்தது: மாணவா்கள் கருத்து

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தமிழ் பாடத்தைப் போன்றே ஆங்கிலத் தோ்வும் ஓரளவுக்கு எளிதாக இருந்ததாக மாணவா்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா். தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாண... மேலும் பார்க்க

காா் மோதியதில் மென்பொறியாளா் உயிரிழப்பு

சென்னை அருகே பள்ளிக்கரணையில் காா் மோதியதில் மென்பொறியாளா் உயிரிழந்தாா். துரைப்பாக்கம், சாய் நகரைச் சோ்ந்தவா் தன்ராஜ் (42). மென்பொறியாளரான இவா், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து... மேலும் பார்க்க

ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா். மயிலாப்பூா... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரய... மேலும் பார்க்க

கால்வாயில் ஆண் குழந்தை சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்வாயில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பட்டினப்பாக்கம் மசூதி தெருவில் 132 பிளாக் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிய... மேலும் பார்க்க