செய்திகள் :

சென்னையில் ஐயப்பனின் முதல் கோயில்...

post image

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில் சென்னையில் உள்ள ஐயப்பனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் கோயிலாகும்.

சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு வழிகாட்ட "ஐயப்ப பக்தர்கள் சபா' 1968 }இல் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து, மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் 1974 -இல் நடைபெற்றது.

மூலவர் ஐயப்பன். விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்டோரின் சந்நிதிகளும் உள்ளன. கிருஷ்ண சிலாவில் செய்யப்பட்ட குருவாயூரப்பனின் தனித்துவமான சிலை குருவாயூரப்பனிலிருந்து கொண்டு வரப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது "சிறிய குருவாயூர்' என்றும் அழைக்கப்படுகிறது.

சபரிமலையைப் போன்று, மண்டல பூஜைகள், மகர விளக்கு பூஜைகள், யாத்திரைகள் நடத்தப்படுகின்றன.

இந்தக் கோயிலின் பொன் விழா சொப்னம் ஹாலில் 2025 மார்ச் 23}இல் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் இரவு 8 மணிக்குள் நடைபெறுகிறது.

விழாவில் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், திருவிதாங்கூர் தேவஸ்தானம் தலைவர் பி.எஸ்.பிரசாந்த், எஸ்.வேதாந்தம்ஜி, எஸ்.ஆர்.எம். பல்கலை. துணை வேந்தர் ரவி பச்சமுத்து, ஸ்ரீ ஐயப்பப் பக்த சபா தலைவர் என்.கே.மூர்த்தி மற்றும் சபரிமலை கோயில் நிர்வாகத்தினர் பங்கேற்கின்றனர்.

அருள் தரும் தட்சிணாமூர்த்தி

சிவனின் 25 திருமேனிகளில் ஒன்பதாவதாக இடம்பெறுபவர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. நட்சத்திரங்கள் 27 என்பதற்கேற்ப கருவறைக் கோயில் தரையில் இருந்து, உச்சிக்கோபுரக் கலசத்தின் உயரம் 27 அடியாகும். 9 கிரகங்களுக்கு அதிபத... மேலும் பார்க்க

கேட்டது கிடைக்கும்...

போர்க் களத்தில் தனக்கு உதவி புரிந்த கைகேயிக்கு இரு வரங்கள் தருவதாக தசரதன் அளித்த வாக்குறுதியால், ராமர் 14 ஆண்டுகள் வன வாசம் சென்றார். சீதையும், லட்சுமணனும் உடன் சென்றனர். ராமரின் பாதுகைகளை சிம்மாசனத்த... மேலும் பார்க்க

கட்டெறும்பு காட்டிய காசி விசுவநாதர்

தென்பாண்டி நாட்டில் 15}ஆம் நூற்றாண்டில் விந்தன்கோட்டையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன். வாரணாசிக்குச் சென்று விசுவநாதரை வழிபட எண்ணம் கொண்டார். முருகன் அருளால், அனிமா... மேலும் பார்க்க

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு: வார பலன்கள்!

ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மார்ச் 28 - ஏப்லல் 3) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)முயற்சிகள் முன்... மேலும் பார்க்க

தோஷங்கள் போக்கும் தேவர் மலை

பிரகலாதனுக்கு இடர்களைத் தந்தார் தந்தை இரணியன். ஒருநாள் இரணியன், ""உன் ஹரி எங்கிருக்கிறான்'' எனக் கேட்டு, பதில் இல்லை. ""இந்தத் தூணில் இருக்கின்றானா?'' எனக் கேட்டார் இரணியன். ""தூணிலும் இருப்பான் துரும... மேலும் பார்க்க

திருமணத் தடை நீங்க...

திருவள்ளுர் மாவட்டத்தில் பழைமையான கோயில்களில் ஒன்று திருப்பாலைவனம் ஊரில் அமைந்துள்ள திருப்பாலீசுவர கோயிலாகும். ஒருமுறை முதலாம் ராஜேந்திர சோழன் தனது பெரும்படையுடன் வடபுலம் சென்று வெற்றிக் கொடி நாட்டி த... மேலும் பார்க்க