செய்திகள் :

திருமணத் தடை நீங்க...

post image

திருவள்ளுர் மாவட்டத்தில் பழைமையான கோயில்களில் ஒன்று திருப்பாலைவனம் ஊரில் அமைந்துள்ள திருப்பாலீசுவர கோயிலாகும்.

ஒருமுறை முதலாம் ராஜேந்திர சோழன் தனது பெரும்படையுடன் வடபுலம் சென்று வெற்றிக் கொடி நாட்டி திரும்பியபோது, பாலை மரங்கள் நிறைந்திருந்த இந்தப் பகுதியில் தங்கி ஓய்வெடுத்தார். அப்போது ஒரு பாலை மரத்தில் பிணைக்கபட்டிருந்த யானை மூர்ச்சை அடைந்து விழுந்தது. உடனே அந்த மரத்தை வெட்டுமாறு மன்னர் உத்தரவிட்டார். கோடாரிப்பட்ட இடத்திலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. உடனே மரத்தை வெட்டுவதை நிறுத்தினர். அப்போது தேவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்க வடிவிலான இறைவன் தலை மீது ரத்தம் வெளிப்பட்டது.

உடனே மன்னர் அங்கு கோயிலையும் நிறுவினார். இந்தக் கோயிலே தூங்கானை மாடமாக அமைந்த திருப்பாலீசுவர பெருமான் கருவறைக் கோயிலாகும். கோடாரியால் இடப்பட்ட தழும்பை இன்றும் காண முடிகிறது. மூலவரை வலமாகக் கொண்ட லோகாம்பிகா தேவி சன்னதி அமைந்துள்ளது.

தேவர்களும். அசுரர்களும் திருப்பாற்கடலை அமுதம் வேண்டி கடைந்த நாள் அமாவாசை. ஆலகாலவிஷம் வெளிப்பட்ட நாள் அமாவாசைக்குப் பத்தாம் நாளாகிய தசமி திதி. அமுதம் கிடைத்தது பதினோராம் நாளாகிய ஏகாதசி திதி. அசுரர்களைப் புறக்கணித்து அமுதத்தை உண்ணுவதற்கு மறைவான இடம் தேடி தேவர்கள் அலைந்த நாள் பன்னிரெண்டாம் நாளாகிய துவாதசி. அவர்கள் அமுதத்தை உண்ணுவதற்கு தேர்ந்தெடுத்த மறைவான இடம் இன்றைய திருப்பாலைவனம் பகுதியாகும்.

சிவன் பூசித்த நாள் "திரயோதசி' . அதாவது பதிமூன்றாம் நாளான மாலை 4.30 முதல் 6.30 மணி வரை சுக்லபட்சத்துப் பிரதோஷ காலம். அந்த நேரத்தில் நந்தி தேவரின் தலை மீது நின்று "சந்தியாத் தாண்டவம்' எனும் நடனத்தை முப்பத்து முக்கோடி தேவர்களும் காணுமாறு ஆடியதாக புராணம் புகழ்கிறது.

இங்கு பிரதோஷ வழிபாட்டை மேற்கொண்டால் எல்லா நன்மைகளும் கைக்கூடும் திருமணத் தடை அகலும் என்பது ஐதீகம்.

பொ.ஜெயச்சந்திரன்

அருள் தரும் தட்சிணாமூர்த்தி

சிவனின் 25 திருமேனிகளில் ஒன்பதாவதாக இடம்பெறுபவர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. நட்சத்திரங்கள் 27 என்பதற்கேற்ப கருவறைக் கோயில் தரையில் இருந்து, உச்சிக்கோபுரக் கலசத்தின் உயரம் 27 அடியாகும். 9 கிரகங்களுக்கு அதிபத... மேலும் பார்க்க

கேட்டது கிடைக்கும்...

போர்க் களத்தில் தனக்கு உதவி புரிந்த கைகேயிக்கு இரு வரங்கள் தருவதாக தசரதன் அளித்த வாக்குறுதியால், ராமர் 14 ஆண்டுகள் வன வாசம் சென்றார். சீதையும், லட்சுமணனும் உடன் சென்றனர். ராமரின் பாதுகைகளை சிம்மாசனத்த... மேலும் பார்க்க

கட்டெறும்பு காட்டிய காசி விசுவநாதர்

தென்பாண்டி நாட்டில் 15}ஆம் நூற்றாண்டில் விந்தன்கோட்டையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன். வாரணாசிக்குச் சென்று விசுவநாதரை வழிபட எண்ணம் கொண்டார். முருகன் அருளால், அனிமா... மேலும் பார்க்க

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு: வார பலன்கள்!

ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மார்ச் 28 - ஏப்லல் 3) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)முயற்சிகள் முன்... மேலும் பார்க்க

சென்னையில் ஐயப்பனின் முதல் கோயில்...

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில் சென்னையில் உள்ள ஐயப்பனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் கோயிலாகும். சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு வழிகாட்ட "ஐயப்ப பக்தர்கள் சபா' 1968 }இல் ... மேலும் பார்க்க

தோஷங்கள் போக்கும் தேவர் மலை

பிரகலாதனுக்கு இடர்களைத் தந்தார் தந்தை இரணியன். ஒருநாள் இரணியன், ""உன் ஹரி எங்கிருக்கிறான்'' எனக் கேட்டு, பதில் இல்லை. ""இந்தத் தூணில் இருக்கின்றானா?'' எனக் கேட்டார் இரணியன். ""தூணிலும் இருப்பான் துரும... மேலும் பார்க்க