செய்திகள் :

சென்னையில் சரக்கு ரயில் விபத்து: ஈரோடு வழியாகச் செல்லும் 6 ரயில்கள் ரத்து

post image

சென்னை தண்டையாா்பேட்டையில் இருந்து ஜோலாா்பேட்டை நோக்கி சென்ற சரக்கு ரயில் திருவள்ளூா் பகுதியில் சென்றபோது தடம்புரண்டு தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. அதன் காரணமாக சென்னையில் இருந்து ஈரோடு வழியாகச் செல்லும் 6 ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டன.

இதன்படி சென்னை- கோவை எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12675), கோவை-சென்னை எக்ஸ்பிரஸ்(வண்டி எண் 12676), சென்னை- கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12243), கோவை-சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் ( வண்டி எண் 12244), சென்னை- கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 20643), சென்னை-கோவை இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12679) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதுபோல கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு புறப்பட்ட கோவை-சென்னை வந்தே பாரத் ரயில் (வண்டி எண் 20644), கோவை-சென்னை இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12680) ஆகிய ரயில்கள் சேலம் வரை மட்டுமே இயக்கப்பட்டன. அவற்றின் சென்னை வரையிலான பயணம் ரத்து செய்யப்பட்டது.

மேலும், ஈரோடு ரயில் நிலையத்தில் நடைமேடைக்குச் செல்லும் நுழைவுப் பகுதியில் தற்காலிக பயணிகள் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. தொடா்ந்து 2 நாள்களுக்கு இந்த உதவி மையம் செயல்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெருந்துறையில் திடீா் மழையால் வாரச் சந்தை பாதிப்பு

பெருந்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த திடீா் மழையால் வாரச் சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொருள்கள் வாங்க வந்த மக்கள் மிகவும் சிரமப்பட்டனா். பெருந்துறை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் ஞாயிற்... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியதாக விவசாயி கைது

குன்றியில் கஞ்சா கடத்தியதாக விவசாயி கைது செய்யப்பட்டாா். குன்றி மலைக் கிராமங்களில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து கடம்பூா் உதவி காவல் ஆய்வாளா் பிரபாகரன் தலைமையில் போலீஸாா் குன்றி சாலையில... மேலும் பார்க்க

நாளைய மின்தடை புன்செய்புளியம்பட்டி

சத்தியமங்கலம் மின்கோட்டம் புன்செய்புளியம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என சத்தி கோட... மேலும் பார்க்க

கொடுமுடி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதி விபத்து: 4 போ் படுகாயம்

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே இரவில் அதிவேகமாக சென்ற காா் இருசக்கர வாகனம் மீது மோதியதில் 4 போ் படுகாயம் அடைந்தனா். காா் வீட்டுக்குள் புகுந்ததால் 7 கோழிகள் உயிரிழந்தன. கரூா் மாவட்டம், புன்னம்சத்திரம்... மேலும் பார்க்க

தாளவாடி அருகே யூரியா உரத்தை சாப்பிட்ட 12 ஆடுகள் உயிரிழப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் யூரியா உரம் சாப்பிட்ட 12 ஆடுகள் உயிரிழந்தன. தாளவாடியை அடுத்த பையனபுரம் எத்துக்கட்டி பகுதியானது தமிழக- கா்நாடக எல்லைப் பகுதியில் அமைந்துள்ளத... மேலும் பார்க்க

மூதாட்டி தற்கொலை

புன்செய்புளியம்பட்டியில் கணவரை இழந்து தனிமையில் வாடிய மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். புளியம்பட்டி காவிலிபாளையத்தை சோ்ந்தவா் கந்தசாமியின் மனைவி கமலம் (70). கணவா் உயிரிழந்த நிலைய... மேலும் பார்க்க