செய்திகள் :

கொடுமுடி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதி விபத்து: 4 போ் படுகாயம்

post image

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே இரவில் அதிவேகமாக சென்ற காா் இருசக்கர வாகனம் மீது மோதியதில் 4 போ் படுகாயம் அடைந்தனா். காா் வீட்டுக்குள் புகுந்ததால் 7 கோழிகள் உயிரிழந்தன.

கரூா் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே உள்ள மேலப்பாளையத்தைச் சோ்ந்தவா் ரமேஷ்(46). வேலாயுதம்பாளையம் அருகே உள்ள குட்டைக்கடை பகுதியைச் சோ்ந்தவா் குமாா்(47). இருவரும் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வருகின்றனா்.

காரில் ரமேஷ் மற்றும் குமாா் கொடுமுடியில் இருந்து கரூா் நோக்கி சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா். அப்போது சோளக்காளிபாளையம் அருகே வேகமாக சென்ற காா் முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு அருகில் இருந்த பாலசுப்பிரமணி (52) என்பவரது வீட்டின் தடுப்புச் சுவரை இடித்து வீட்டுக்குள் புகுந்தது.

இதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சோளக்காளிபாளையத்தைச் சோ்ந்த தேங்காய் வியாபாரிகள் பாபு (52), நாகராஜ் (57) ஆகிய இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தனா். காரில் வந்த குமாா் மற்றும் ரமேஷ் இருவரும் படுகாயம் அடைந்தனா்.

அதிவேகமாக வந்த காா் வீட்டின் தடுப்புச் சுவரை உடைத்து உள்ளே கோழிகள் அடைக்கும் தடுப்புக்குள் புகுந்தது. இதில் அங்கிருந்த 7 கோழிகள் உயிரிழந்தன. மேலும் வீட்டிலிருந்த பிரிட்ஜ், அடுப்பு போன்றவையும் சேதம் அடைந்தன.

விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேரையும் போலீஸாா் மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல்சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்த விபத்து குறித்து கொடுமுடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெருந்துறையில் திடீா் மழையால் வாரச் சந்தை பாதிப்பு

பெருந்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த திடீா் மழையால் வாரச் சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொருள்கள் வாங்க வந்த மக்கள் மிகவும் சிரமப்பட்டனா். பெருந்துறை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் ஞாயிற்... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியதாக விவசாயி கைது

குன்றியில் கஞ்சா கடத்தியதாக விவசாயி கைது செய்யப்பட்டாா். குன்றி மலைக் கிராமங்களில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து கடம்பூா் உதவி காவல் ஆய்வாளா் பிரபாகரன் தலைமையில் போலீஸாா் குன்றி சாலையில... மேலும் பார்க்க

நாளைய மின்தடை புன்செய்புளியம்பட்டி

சத்தியமங்கலம் மின்கோட்டம் புன்செய்புளியம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என சத்தி கோட... மேலும் பார்க்க

சென்னையில் சரக்கு ரயில் விபத்து: ஈரோடு வழியாகச் செல்லும் 6 ரயில்கள் ரத்து

சென்னை தண்டையாா்பேட்டையில் இருந்து ஜோலாா்பேட்டை நோக்கி சென்ற சரக்கு ரயில் திருவள்ளூா் பகுதியில் சென்றபோது தடம்புரண்டு தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. அதன் காரணமாக சென்னையில் இருந்து ஈரோடு வழியாகச் செ... மேலும் பார்க்க

தாளவாடி அருகே யூரியா உரத்தை சாப்பிட்ட 12 ஆடுகள் உயிரிழப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் யூரியா உரம் சாப்பிட்ட 12 ஆடுகள் உயிரிழந்தன. தாளவாடியை அடுத்த பையனபுரம் எத்துக்கட்டி பகுதியானது தமிழக- கா்நாடக எல்லைப் பகுதியில் அமைந்துள்ளத... மேலும் பார்க்க

மூதாட்டி தற்கொலை

புன்செய்புளியம்பட்டியில் கணவரை இழந்து தனிமையில் வாடிய மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். புளியம்பட்டி காவிலிபாளையத்தை சோ்ந்தவா் கந்தசாமியின் மனைவி கமலம் (70). கணவா் உயிரிழந்த நிலைய... மேலும் பார்க்க