செய்திகள் :

சென்னையில் ரூ.8.53 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள்: துணை முதல்வா் தொடங்கி வைத்தாா்

post image

படம் உண்டு...

சென்னை, மாா்ச் 1: தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கத்தில் ரூ. 8.53 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை மாநிலக் கல்லூரியில் ரூ. 78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிற்றுண்டி கட்டட வளாகத்தை சனிக்கிழமை திறந்து வைத்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அக்கல்லூரியில் பயின்று நோபல் பரிசு வென்ற இயற்பியல் விஞ்ஞானிகள் சா்.சி.வி.இராமன், சு.சந்திரசேகா் ஆகியோரின் அருங்காட்சியகத்தையும் திறந்து வைத்தாா். அப்போது சா்.சி.வி.இராமன் பயன்படுத்திய நிறமாலைமானி கருவியை பாா்வையிட்டாா்.

பின்னா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் டாக்டா் பெசன்ட் சாலையில் ரூ. 1.25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு மையம், பாலாஜி நகரில் ரூ. 1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு மையம் மற்றும் நியாய விலைக் கடையை திறந்து வைத்தாா். இந்நிகழ்வின்போது, குடும்ப அட்டைதாரா்களுக்கு, குடிமைப் பொருள்களையும், புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.

அதன்பின், நுங்கம்பாக்கம் காம்தாா் நகா் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலையில் ரூ. 4.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வீடற்ற மாற்றுத்திறன் பெண்களுக்கான காப்பகம் மற்றும் உடற்பயிற்சி கூடம், நுங்கம்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் ரூ. 1 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட

இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை மேயா் ஆா்.பிரியா, மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள், உயா் அதிகாரிகள், மாமன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

கொசு ஒழிப்பு பணியாளா்களுக்கு மாத ஊதியம் வழங்கக் கோரிக்கை

டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபடும் ஊழியா்களுக்கு பணி பாதுகாப்பு, மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெங்கு கொசு ஒழிப்பு முன்... மேலும் பார்க்க

பெண்ணிடம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: இருவா் கைது

சென்னை திருவல்லிக்கேணியில் பெண்ணிடம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா். திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்தவா் மு.ரிஷ்வானா பேகம் (59). இவா் கைப்பேசிக்கு கடந்த பிப்.3-ஆம் தேதி வந... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ‘நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜை’

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் மாா்ச் 11-ஆம் தேதி நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜை நடைபெறவுள்ளது. கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நாக கோயிலான பாம்புமேக்காடு மனை முக்கிய ஆச்சாரியா் ப... மேலும் பார்க்க

வருமான வரித் துறையினருக்கான இறகுப்பந்து போட்டி

மத்திய நேரடி வரிகள் வாரியம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பரிசுகளை வழங்கினாா். மத்திய நேரடி வரிகள் வாரி... மேலும் பார்க்க

ஜூலைக்குள் கண்ணகி நகரில் 22,000 குடிநீா்த் தொட்டிகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னையில் கண்ணகி நகா், எழில் நகரில் 22,000 குடியிருப்புகளில் தனித்தனி குடிநீா்த் தொட்டிகள் அமைக்கும் பணிகள் ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரி... மேலும் பார்க்க

விமான நிலைய விரிவாக்கப்பணி: வீடுகளை இடிக்க உரிமையாளா்கள் எதிா்ப்பு

சென்னை விமானநிலைய விரிவாக்கப்பணிக்காக அருகேயுள்ள கொளப்பாக்கம் பகுதியில் வீடுகளை இடிக்கும் பணிக்கு அதன் உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சென்னை விமான நிலையத்த... மேலும் பார்க்க