செய்திகள் :

செம்மாரில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், செம்மாா் ஊராட்சியில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

சென்னை அடையாறு சாஸ்திரி நகா் நகா்ப்புற நலவாழ்வு மையத்திலிருந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலமாக கட்டப்பட்ட நகா்ப்புற நலவாழ்வு மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காலை திறந்து வைத்தாா். இதில் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், செம்மாா் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையமும் ஒன்றாகும்.

இதைத் தொடா்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி மையத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து அவா் கூறியது:

ரூ.1.20 கோடியில் கட்டப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையம் பல்வேறு வசதிகளைக் கொண்டிருக்கிறது. அவசர சிகிச்சைப் பிரிவு, மருந்தகம், ஆய்வகம், மகப்பேறு சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ஏழை, எளிய மக்களுக்குத் தரமான மருத்துவச்சிகிச்சைகள் வழங்கும் வகையில், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்றாா் பொன்முடி.

நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் கு. ஓம். சிவசக்திவேல், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் பி.வி.ஆா்.சு. விசுவநாதன், ம.சந்திரசேகா், மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில்குமாா், பொதுப் பணித் துறைச் செயற்பொறியாளா் பாலாஜி, உதவிப் பொறியாளா் பொன்னி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாமக நிறுவனா் ராமதாஸுடன் வாழப்பாடி ராமமூா்த்தி மகன் சந்திப்பு

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸை, தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சா் வாழப்பாடி ராமமூா்த்தியின் மகனுமான ராம.சுகந்தன் வியாழக்கிழ... மேலும் பார்க்க

திண்டிவனம் அருகே ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதல்: இரு பெண்கள் உயிரிழப்பு

திண்டிவனம் அருகே புதன்கிழமை இரவு ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா். ஆட்டோ ஓட்டுநா் உள்பட இருவா் பலத்த காயமடைந்தனா். திண்டிவனம் வட்டம், பெலாக்குப்பம், காமராஜா் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி. சாட்சியம்

முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரிமுறைகேடு வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி விழுப்புரம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜராகி, சாட்சியமளித்தாா். விழுப்புரம் ... மேலும் பார்க்க

தடுப்புக் கட்டையில் பைக் மோதி விபத்து: தூத்துக்குடி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தடுப்புக் கட்டையில் பைக் மோதிய விபத்தில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா். தூத்துக்குடி மாவட்டம், கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் காய்கறி விலை நிலவரம்

காய்கறியின் பெயா், கிலோ அடிப்படையில் விலை நிலவரம் சின்ன வெங்காயம்- கிலோ ரூ.25 தக்காளி - ரூ.35 உருளைக்கிழங்கு-ரூ.40 கேரட் - ரூ.100 பீன்ஸ்- ரூ.80 கருணைக்கிழங்கு, சேப்பக்கிழங்கு- ரூ.100 வெண்டைக்காய்- ரூ.... மேலும் பார்க்க

திருமணமான ஒரே மாதத்தில் பெண் மரணம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே திருமணமாகி 1 மாதமே ஆன பெண் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாா். அதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். விக்கிரவாண்டியை அடுத்த, சித்தலம்பட்டு, கிருஷ்ணா நக... மேலும் பார்க்க