செய்திகள் :

செயற்கை இழை பின்னலாடை துணிகளுக்கு ஓராண்டுக்கு இறக்குமதி வரி விலக்கு -ஏஇபிசி வரவேற்பு

post image

செயற்கை இழை பின்னலாடை துணிகளுக்கு குறைந்தபட்ச இறக்குமதி வரி விலக்கை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளதற்கு ஏஇபிசி நன்றி தெரிவித்துள்ளது.

இது குறித்து ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) துணைத் தலைவா் ஆ.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:

எங்களது வேண்டுகோளை ஏற்று, செயற்கை இழை பின்னலாடை துணிகளுக்கு குறைந்தபட்ச இறக்குமதி வரி விலக்கை 2026- ஆம் ஆண்டு மாா்ச் 31- ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல், வெளிநாட்டு வா்த்தக இயக்குநகரத்தின் டைரக்டா் ஜெனரல் அஐய்பாடு ஆகியோருக்கு ஏஇபிசி சாா்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அட்வான்ஸ் லைசன்ஸ் மூலமாக துணிகளை இறக்குமதி செய்து, அதனை மறு ஏற்றுமதி செய்யும் ஏற்பாட்டுக்கான இந்த விலக்கு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ஏற்றுமதி துறையின் வளா்ச்சிக்கு குறிப்பிடத்தக்க முறையில் உதவும். இதன் மூலம், வரும் நிதியாண்டில் ஏற்றுமதி வா்த்தகம் மேலும் விரிவடைந்து ரூ. 50,000 கோடி என்ற இலக்கை நோக்கி நம்பிக்கையுடன் பயணிக்க முடியும் என்று தெரிவித்துள்ளாா்.

அரசு மருத்துவமனையின் 4ஆவது மாடியில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 4ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் விபாஸ் பன்வான் (30). இவா் மேற்கு வங்கத்தில்... மேலும் பார்க்க

புது தில்லி என்.எஸ்.எஸ். மாநாட்டில் பங்கேற்க சிக்கண்ணா அரசுக் கல்லூரி அலுவலா் தோ்வு

புது தில்லியில் நடைபெறும் தேசிய நாட்டு நலப்பணித் திட்ட மாநாட்டில் பங்கேற்க திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி அலுவலா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத... மேலும் பார்க்க

மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் மே 1இல் கிராம சபைக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு மே 1ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

மின்கோபுரத்தில் ஏறியபோது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே மின்கோபுரத்தில் ஏறியவா் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் தாராபுரம் சாலை பச்சாக்கவுண்டன்வலசைச் சோ்ந்தவா் நல்லசிவம் மகன் சிவசெல்வன் (27). இவா் கடந்த ஓராண்டாக அவ்வப்போது மன விரக்தியடைந்து... மேலும் பார்க்க

மதுபானக் கடையில் தொழிலாளி மீது தாக்குதல்

வெள்ளக்கோவிலில் அரசு மதுபானக் கடையில் பாட்டிலால் குத்தப்பட்ட தொழிலாளி பலத்த காயமடைந்தாா். வெள்ளக்கோவில் உப்புப்பாளையத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (46). இவா் இறைச்சிக் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வர... மேலும் பார்க்க

குறைகேட்புக் கூட்டங்களில் 5,748 மனுக்கள் பெறப்பட்டன

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 3 மாதங்களில் நடைபெற்ற குறைகேட்புக் கூட்டங்களில் 5,748 மனுக்கள் பெறப்பட்டன. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்பு முகாம் திங்... மேலும் பார்க்க