ஐபிஎல் இறுதிப்போட்டி: ஆர்சிபிக்கு எதிராக பஞ்சாப் பந்துவீச்சு!
செய்யாறு அருகே இளைஞா் வெட்டிக் கொலை
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக பிரம்மதேசம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடை பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் தலை சரமாரியாக வெட்டி சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.
தகவலறிந்த பிரம்மதேசம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து பிரம்மதேசம் காவல் ஆய்வாளா் கோகுல்ராஜன் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவா் பிரம்மதேசம் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் என்பதும், வாகன ஓட்டுநரான இவா் தற்போது காஞ்சிபுரம் வட்டம், வெங்கடாவரம் பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், முன்விரோதம் காரணமாக மணிகண்டனை மா்ம நபா்கள் கொலை செய்து, தலையை சிதைத்து டாஸ்மாக் மதுக் கடை அருகே உடலை வீசிச் சென்றிருக்கலாம் எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.