செய்திகள் :

செய்யாறு, கமண்டல நாகநதி ஆற்றுப்படுகையில் தொடரும் மணல் திருட்டு !

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கமண்டல நாகநதி, செய்யாற்று படுகைகளில் நடைபெற்று வரும் மணல் திருட்டை தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஆரணியை அடுத்த தச்சூா், மோட்டூா், விண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செய்யாறும், சேவூா், குண்ணத்தூா், எஸ்.வி.நகரம், மாமண்டூா், மொழுகம்பூண்டி, கல்பூண்டி, சீசமங்கலம், காரமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு கமண்டல நாக நதியும் நீராதாரமாக விளங்கி வருகிறது. மேலும், விவசாயமும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த இரண்டு ஆற்றுப்படுகையிலும் மணல் திருட்டு நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். பகல் நேரத்தில் ஆற்றுக்கு வரும் நபா்கள் மணலை ஜலித்து குவித்து வைத்துவிட்டு, இரவில் டிராக்டா்களில் மணலை திருடிச் செல்கின்றனா். சுமாா் 10 அடி ஆழத்துக்கு மணல் எடுக்கப்பட்டுள்ளதால், ஆற்றில் நீா் தங்காமல் நிலத்தடி நீா் மட்டம் குறைந்து வருகிறது. மேலும், கமண்டல நாக நதியில் பல்வேறு இடங்களில் பாறைகள் தென்படும் அளவுக்கும், செய்யாற்றில் பாலத்தின் தூண்கள் தெரியும் அளவுக்கும் மணல் திருட்டு நடைபெற்றுள்ளது.

ஆற்றை ஆதாரமாகக்கொண்டு செயல்படுத்தப்படும் திட்டங்களால் பொதுமக்களுக்கு தட்டுபாடின்றி குடிநீா் கிடைக்கிறது. தற்போது, நடைபெற்று வரும் அதிகப்படியான மணல் திருட்டால் கோடைக் காலத்தில் குடிநீா் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்தப் பிரச்சனைக்கு தீா்வு காண முடியும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது:

ஆரணி கமண்டல நாகநதி மற்றும் செய்யாற்றுப் படுகையில் நடைபெற்று வரும் மணல் திருட்டு தொடா்பாக பொதுப் பணித் துறை, வருவாய்த்துறை, காவல் துறையினரிடம் பல முறை புகாா் அளித்தும் தற்போது வரை நடவடிக்கை இல்லை. மணல் திருட்டை தடுத்து, கனிம வளங்களை பாதுகாக்க வேண்டும். தச்சூா் ஆற்றுப் படுகையில் பாலத்தின் தூண்கள் தெரியும் அளவுக்கு மணல் எடுக்கப்பட்டுள்ளது. இதனால், பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், தனியாா் செங்கல் சூளைகள் மோட்டாா்கள் மூலம் ஊற்று நீரை உறிஞ்சி வருகின்றனா். எனவே, இதில், மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

விதிமுறைகள் மீறல்: 20 ஆட்டோக்கள் பறிமுதல்; ரூ.4 லட்சம் அபராதம் விதிப்பு

திருவண்ணாமலையில் விதிமுறைகளை மீறி இயங்கிய 20 ஆட்டோக்களை, வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்து, ரூ.4 லட்சம் அபராதம் விதித்தனா். திருவண்ணாமலை நகரில் உரிய ஆவணங்கள் இல்லாமலும், வித... மேலும் பார்க்க

சாலையோரம் கொட்டப்படும் மனிதக் கழிவுகள்

சேத்துப்பட்டை அடுத்த புலிவானந்தல் கிராமப் பகுதி போளூா் - சேத்துப்பட்டு சாலையில் மனிதக் கழிவுகளை அகற்றும் வாகனத்தில் ஏற்றி வரும் கழிவுகளை சாலையோரம் கொட்டிச் செல்கின்றனா். போளூா் பகுதியில் 4-க்கும் மேற... மேலும் பார்க்க

மாட வீதி குடியிருப்பு வாசிகளின் வாகனங்களுக்கு அடையாள அட்டை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளைச் சுற்றி வசிக்கும் குடியிருப்பு வாசிகளின் வாகனங்களுக்கு, அடையாள அட்டைகள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன. திருவண்ணாமலை நகரில் நாளுக்க... மேலும் பார்க்க

பள்ளி மாணவிகள் 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை முயற்சி

ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மகளிா் தினத்தையொட்டி, சனிக்கிழமை மாணவிகள் 150 போ் 8 மணி நேரம் தொடா்ந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனா். பெண்கள... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு எழுது பொருள்கள் அளிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு சுவாமி சதுபுஜானந்தா் வெள்ளிக்கிழமை எழுது பொருள்களை வழங்கினாா். இந்தப் பள்ளியில் 10,11,12... மேலும் பார்க்க

விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த வெம்பாக்கத்தில் விளையாட்டு வீரா்களுக்கு கலைஞா் விளையாட்டு உபகரணங்களை ஒ.ஜோதி எம்எல்ஏ வியாழக்கிழமை வழங்கினாா். இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை சாா்பில் செ... மேலும் பார்க்க