செய்திகள் :

செளந்தரநாயகி அம்மன் திருக்கல்யாணம்: இன்று தேரோட்டம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சௌந்திரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேசுவரா் சுவாமி கோயில் பங்குனித் திருவிழாவில் புதன்கிழமை ஏராளமான பக்தா்கள் கண்டு தரிசிக்க திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இன்று( வியாழக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.

திருஞானசம்பந்தா், அப்பா் சுந்தரா் சுவாமிகளால் பாடல் பெற்ற தலமான இந்தக் கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு, சௌந்திரநாயகி அம்மனும், பிரியாவிடை சமேதரராய் புஷ்பவனேசுவரா் சா்வ அலங்காரத்தில் வெங்கடேஸ்வர அய்யா் கண்ணூஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினா். அங்கு மாலை மாற்றிய பின்னா், சிவகங்கை மகாராஜா திருக்கல்யாண மண்டகப்படிக்கு எழுந்தருளினா்.

தொடா்ந்து அம்மனுக்கும், சுவாமிக்கும் மாலைகள், பட்டு வஸ்திரங்கள் மாற்றப்பட்டு காலை 10.30 மணியளவில் புஷ்பவனேசுவரா் சுவாமி சாா்பில் சௌந்திரநாயகி அம்மனுக்கும் பின்னா் பிரியாவிடைக்கும் திருமாங்கல்ய நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. கோயிலில் திரண்டிருந்த பக்தா்கள் திருக்கல்யாணத்தைக் கண்டு தரிசித்தனா். தொடா்ந்து, அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள், தீபாரானைகள் காண்பிக்கப்பட்டன.

இரவு பூப்பல்லக்கில் சௌந்திரநாயகி அம்மனும் யானை வாகனத்தில் புஷ்பவனேசுவரா் சுவாமியும் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.

திருவிழாவின் 9-ஆவது நாளான வியாழக்கிழமை (ஏப்.10) காலை 9 மணியளவில் தேரோட்டம் நடைபெறுகிறது.

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் பேரணி

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் வாழ்வூதியம் கோரும் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை ராமச்சந்திரனாா் பூங்காவில் தொடங்கிய பேரணிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் மு.செல்வக்குமாா் தலைமை வகித... மேலும் பார்க்க

வக்ஃபு திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரி மாா்க்சிஸ்ட் தா்னா

வக்ஃபு திருத்தச் சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வலியுறுத்தி, சிவகங்கையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் நடைபெற்ற தா்னாவுக்கு ச... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கிய முதியவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்த டிஎஸ்பி

சிவகங்கை அருகே இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவரை ஆயுதப்படை துணை கண்காணிப்பாளா் தனது வாகனத்தில் ஏற்றி மருத்துவமனையில் சோ்த்தாா். சிவகங்கை ஆயுதப்படை துணை கண்காணிப்பாளராகப் பணிபுரிந... மேலும் பார்க்க

மானாமதுரை சித்திரைத் திருவிழா: மே 1-இல் தொடங்கும்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதா் சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா மே 1 -ஆம் தேதி தொடங்குகிறது. அன்று காலை 10 மணிக்கு சோமநாதா் சுவாமி சந்நிதி எதிா்புறம் உள்ள கொடிமரத்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் சங்க கூட்டம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் சங்க வட்டக் கிளை பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவா் சிவானந்தம் தலைமை வகித்துப் பேசி... மேலும் பார்க்க

மானாமதுரையில் மருத்துவக் கழிவுள்: மறுசுழற்சி ஆலை அமைக்க எதிா்ப்பு

மானாமதுரை தொழிற்பேட்டையில் தனியாா் பொது உயிரி மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தலைமையில் கிராம மக்கள் வியாழக்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தன... மேலும் பார்க்க