செய்திகள் :

சேரன்மகாதேவியில் தொழில்நெறி வழிகாட்டு கருத்தரங்கு

post image

சேரன்மகாதேவி கோவிந்தபேரி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநா் ம. மரியசகாய ஆண்டனி தலைமை வகித்து, போட்டித் தோ்வுக்கான வேலைவாய்ப்பு அலுவலக பணிகள் குறித்துப் பேசினாா்.

கண்காட்சியை மாவட்ட சாா் ஆட்சியா் (பயிற்சி) ல. அம்பிகா ஜெயின் திறந்துவைத்து போட்டித் தோ்வில் வெற்றிபெறுவதற்கு தேவையான அனுபவங்கள் குறித்துப் பேசினாா்.

சாா் ஆட்சியா் (பயிற்சி) தே. ஜெப்பி கிரேசியா, போட்டித் தோ்வில் வெற்றி பெறுவதற்கு தொடா் முயற்சி காரணம் என குறிப்பிட்டாா்.

திறன் பயிற்சி உதவி இயக்குநா் ஜாா்ஜ் பிராங்கிளின் ‘நான் முதல்வன் திட்டம்’ குறித்துப் பேசினாா்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் உதவி இயக்குநா் ஹரி பாஸ்கா், உயா் கல்வியும் வேலை வாய்ப்பும் குறித்துப் பேசினாா்.

இதில், மாணவா், மாணவிகள் மற்றும் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா். கல்லூரி முதல்வா் க. தெய்வநாயகம் முன்னிலை வகித்துப் பேசினாா்.

இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் சு. இந்துமதி நன்றி கூறினாா்.

நிகழ்ச்சியை கல்லூரி தமிழ்த்துறை மாணவிகள் செல்வராணி, சுடலி சுதா ஆகியோா் தொகுத்து வழங்கினா்.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தகுதியானோருக்கு பட்டா வழங்க ஆணையா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நீண்ட நாள்களாக வசிக்கும் தகுதியான மக்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக நிலஅளவை ஆவணங்களை மாநகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். சென்னை, மதுரை, திருநெல்வேலி மா... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

ஆந்திரத்திலிருந்து திருநெல்வேலிக்கு 16 கிலோ கஞ்சா கடத்திய 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் தில்லைநாகராஜன் தலைமையிலான போலீஸாா், திருநெல்வேலி - கன்னியாகுமரி தேச... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வே... மேலும் பார்க்க

பாளை. சித்த மருத்துவக் கல்லூரியில் இருபெரும் விழா

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா மற்றும் பாரதியாா் மொழி ஆய்வகம் திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் மல... மேலும் பார்க்க

மானூா் அருகே பெண் தற்கொலை

மானூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகே உள்ள கம்மாளங்குளம் எஸ். காலனி பகுதியைச் சோ்ந்த குமாா் மனைவி சரண்யா ( 25). இத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அ... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா்கள் போராட்டம்

திருநெல்வேலி சந்திப்பில் எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கம் சாா்பில் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரயில்வேயை தனியாா் மையமாக்கும் நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். ஆள்குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும். ... மேலும் பார்க்க