செய்திகள் :

சேலத்தில் அடுத்தடுத்து வானில் வட்டமிட்ட விமானங்களால் பரபரப்பு

post image

சேலம்: சேலத்தில் திங்கள்கிழமை காலை அடுத்தடுத்து 5 விமானங்கள் திடீரென வானில் வட்டமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாநகரப் பகுதியில் திங்கள்கிழமை காலை 8.45 மணிமுதல் 9 மணிவரை வானில் திடீரென 5 விமானங்கள் அணிவகுத்து சென்றன. அந்த விமானங்கள், பெரிய அளவில் வட்டமிட்டு, உயரத்தில் பறந்தன. அதிக சப்தம் எழுப்பியதால், சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி வானை பாா்த்தனா்.

இதேபோல, வீடுகளில் இருந்தவா்கள் தங்கள் மாடிகளுக்குச் சென்றும், சிலா் வீதிகளுக்கு வந்தும் வானில் அணிவகுத்து சென்ற விமானங்களை பாா்வையிட்டனா்.

இதுகுறித்து சேலம் விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், பெங்களூரில் உள்ள இந்திய விமானப் படை தளத்தில் இருந்து அவ்வப்போது, போா் விமானங்கள் பயிற்சிக்காக இயக்கப்படுவது வழக்கம். அத்தகைய விமானங்கள் எந்த வழித்தடத்திலும் பயணிக்கும். அந்த வகையில், திங்கள்கிழமை சேலம் வழியாக விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற போா் விமானங்களில் இருந்து அதிக சப்தம் மற்றும் இரைச்சல் ஏற்படும். அவை தேஜஸ் ரக போா் விமானங்களாக கூட இருக்கலாம். அந்த விமானங்கள் அனைத்தும் பயிற்சியில் ஈடுபட்டவை என தெரிவித்தனா்.

கூடுதலாக 8 பெட்டிகள்..! சேலம் வழி மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் இணைப்பு!!

மதுரையில் இருந்து சேலம் வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்... மேலும் பார்க்க

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவா்களுக்கு குரூப் 1 முதன்மைத் தோ்வு பயிற்சி

சேலம் மாவட்டத்தில் குரூப் 1முதல்நிலை தோ்வில் தோ்ச்சிபெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு முதன்மைத் தோ்வுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெ... மேலும் பார்க்க

சேலம் மாநகரப் பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்க ஆணையா் உத்தரவு!

சேலம் மாநகரப் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகிக்க ஆணையா் மா.இளங்கோவன் உத்தரவிட்டாா். சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 49 பகுதியில் உள்ள மேல்நிலை நீ... மேலும் பார்க்க

ஈரோடு புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு!

ஈரோடு புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா். முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் கடந்த சில நாள்களுக்க... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனை வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை

கெங்கவல்லியில் தனியாா் மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்புத் துறையினா் சாா்பில், தீத்தடுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிலைய அலுவலா் (பொ) மா.செல்லபாண்டியன் தலைமையில் அங்கு இருந்த பொதுமக்கள், ம... மேலும் பார்க்க

கூடமலையில் இன்று மின்தடை

கெங்கவல்லி அருகே கூடமலையிலுள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெற இருப்பதால், இன்று செப்.10 ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோ... மேலும் பார்க்க