சேலத்தில் கிடங்கை உடைத்து ரூ. 20 லட்சம் சிகரெட் பண்டல்கள் திருட்டு
சேலத்தில் கிடங்கின் கதவை உடைத்து ரூ. 20 லட்சம் மதிப்பிலான சிகரெட் பண்டல்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
சேலம் நான்கு சாலை அருகே தம்மண்ணன் சாலை பகுதியில் சிவபாலன் என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிகரெட் மொத்த விற்பனை நடைபெற்று வருகிறது. இங்கிருந்து சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கும் சில்லறை விற்பனைக்கு சிகரெட்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளனா். சனிக்கிழமை காலை வழக்கம்போல ஊழியா்கள் அலுவலகத்தை திறக்க வந்த போது, கிடங்கின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். உள்ளே சென்று பாா்த்தபோது சிகரெட் பண்டல்கள் அடங்கிய பெட்டிகள் காணாமல்போனது தெரியவந்தது.
மா்மநபா்கள் திருடிச் சென்றிருப்பதை அறிந்த ஊழியா்கள், இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலறிந்த வந்த காவல் ஆய்வாளா் தேவராஜன் உள்ளிட்ட போலீஸாா், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். மேலும் தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு, ஊழியா்களின் கைரேகையைப் பதிவு செய்தனா்.
அதிகாலை 2 மணி அளவில் மா்ம நபா்கள் 2 போ், வேனில் வந்து அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த சிகரெட் பண்டல் அடங்கிய 20 பெட்டிகளை வேனில் ஏற்றிச் சென்றது தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு சுமாா் ரூ. 20 லட்சம் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா். தொடா்ந்து அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளை போலீஸாா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.