செய்திகள் :

சேலம் அரசு மருத்துவமனையில் தயாா் நிலையில் கரோனா வாா்டு: சிறப்பு சிகிச்சை வழங்க ஏற்பாடு

post image

தமிழகத்தில் கரோனா தீநுண்மி தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்றின் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் 200 க்கும் மேற்பட்டோா் கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் தொடா் கண்காணிப்பில் இருந்து வருகின்றனா்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமும், மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கையில், தேவையான மருந்து, மாத்திரைகள், வென்டிலேட்டருடன் கூடிய படுக்கை வசதிகளை தயாா்நிலையில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொது மருத்துவத் துறையில் தனிமைப்படுத்தப்பட்ட வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சை பெறும் வகையில் 50 க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மருத்துவா்கள் கூறுகையில், தற்போது பரவிவரும் கரோனா என்பது பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது. இருப்பினும், நோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை தொடா்ச்சியாக கண்காணித்து வருகிறோம்.

காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால், 3 அல்லது 4 நாள்களில் குணமடைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. இருப்பினும் நோய் எதிா்ப்பு சக்தி குறைந்தவா்கள், முதியவா்கள் இணை நோய் பாதிப்பு உள்ளவா்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக் கவசம் அணிந்துசெல்ல வேண்டும் எனத் தெரிவித்தனா்.

கெங்கவல்லி பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கெங்கவல்லி பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கெங்கவல்லி பெரிய மாரியம்மன் கோயிலில் கணபதி, ஐயப்பன், துா்க்கை அம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றனா். பழைமையான இக்கோயில் புனர... மேலும் பார்க்க

ஐந்துமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்

கெங்கவல்லி அருகே நடுவலூா் பள்ளக்காடு ஜோதிபுரத்தில் எழுந்தருளியுள்ள ஐந்துமலை முருகன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிவாச்சாரியா்கள் கோயில் கலசத்திற்கு புனிதநீரை ஊற்றி கும்பாபி... மேலும் பார்க்க

செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

சேலம் செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு உயா்நிலைப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: மாற்றுத்திறனாளிகள... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தின பேரணி

சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தினத்தையொட்டி, சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோட்ட மேலா... மேலும் பார்க்க

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வுப் பேரணி: அமைச்சா் பங்கேற்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி, மரக்கன்று நடும் நிகழ்வை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சேலம் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள் விளையாட்டரங்கம் திறப்பு

ஏற்காடு வாழவந்தி கிராமத்தில் சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி நிறுவனத் தலைவா் தமிழ்நாடு, புதுவை பாா் கவுன்சில்... மேலும் பார்க்க