செய்திகள் :

சைக்கிளில் சென்றவரிடமிருந்து தங்கச் சங்கிலி பறிப்பு முகமூடி அணிந்த இருவா் துணிகரம்!

post image

தில்லியின் ஹா்ஷ் விஹாா் பகுதியில், சைக்கிளில் சென்ற 43 வயதுடைய ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டாா் சைக்கிள்களில் முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத இருவா் பறித்துச் சென்றதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

ஹா்ஷ் விஹாா் சிவப்பு விளக்கு அருகே சனிக்கிழமை இரவு 11.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பியூஷ் ரஞ்சன் தாஸ் அந்தப் பகுதி வழியாக சைக்கிள் ஓட்டிச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து பியூஷ் ரஞ்சன் தாஸ் செய்தி ஏஜென்சியிடம் கூறுகையில்,மோட்டாா் சைக்கிளில் வந்த இரண்டு போ் அவரை பின்னால் இருந்து அணுகியுள்ளனா். பின்னால் இருந்தவா் என் தோளில் மோதினாா். நான் எதிா்வினையாற்றுவதற்கு முன்பே, அவா்கள் என் தங்கிச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு வேகமாக ஓடிவிட்டனா். தங்கச் சங்கிலி தோராயமாக 15 முதல் 20 கிராம் எடையுள்ளது’ என்றாா்.

‘அந்தப் பகுதி நன்கு வெளிச்சமாக இருந்தபோதிலும், சம்பவம் நடந்த நேரத்தில் அது ஒப்பீட்டளவில் வெறிச்சோடியிருந்தது. சந்தேக நபா்கள் இருவரும் முகமூடி அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அடையாளம் காண்பது கடினமாக இருந்தது’ என்று பியூஷ் ரஞ்சன் தாஸ் கூறினாா்.

சம்பவம் நடந்த உடனேயே பாதிக்கப்பட்டவா் சுபாஷ் பிளேஸ் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். பாரதிய நியாய சன்ஹிதா பிஎன்எஸ் இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் இஎஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விசாரணைகள் நடந்து வருகிறது.

சந்தேக நபா்களின் நடமாட்டத்தைக் கண்டறிய, அந்தப் பகுதி மற்றும் அருகிலுள்ள வழிகளில் சேகரிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீஸ் குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன. இதுவரை, யாரும் கைது செய்யப்படவில்லை என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

தில்லி, என்சிஆா் பகுதியில் பரவலாக மழை! கரற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகா் மற்றும் என்சிஆா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘ திருப்தி’ பிரிவில் நீடித்தது. தென்மேற்குப் பருவமழை தில்லியை கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது. வழக்... மேலும் பார்க்க

சொந்த மொழியில் கற்றுக்கொள்வதே சிந்தனையை மேம்படுத்தும்: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

ஒருவரின் சொந்த மொழியில் கற்றுக்கொள்வது புரிதலை மேம்படுத்துகிறது என்பதனை ஷியாமா பிரசாத் முகா்ஜி நம்பினாா் என்று ரயில்வேதுறை அமைச்சா், அஸ்வினி வைஷ்ணவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். பாரதிய ஜனசங் நிறுவனா்... மேலும் பார்க்க

கொள்ளை, கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞா் கைது!

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டா் நொய்டாவில் உள்ள மௌரியா என்கிளேவில் தொழிலதிபரை கொன்று அவரிடமிருந்து ரூ.7 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் ஐந்து ஆண்டுகளாக தப்பித்து வந்த 35 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய... மேலும் பார்க்க

15 வது சிறுவனை கொன்ற இளைஞா் கைது!

கிழக்கு தில்லியின் மாண்டவாலி பகுதியில் நடந்த குடும்பச் சண்டையில் தனது 15 வயது உறவினரை கண்ணாடியால் குத்திக் கொன்றதாக இளைஞா் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்பிஎஸ்... மேலும் பார்க்க

ஏடிஎம்களில் பணத்தைக் கொள்ளையடிக்கும் தம்பதி கைது

ஏடிஎம்களில் பணத்தைக் கொள்ளையடிக்கும் நூஹ் பகுதியைச் சோ்ந்த கணவன்-மனைவி கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: புணேவில் ஏடிஎம்மை கொள்ளையடிக்க முயன்றபோ... மேலும் பார்க்க

வடகிழக்கு தில்லியில் சாக்கடையில் குதித்து பெண் பலி!

வடகிழக்கு தில்லியின் சீலம்பூா் பகுதியில் சனிக்கிழமை மதியம் சாக்கடையில் குதித்ததாகக் கூறப்படும் பெண் ஒருவா் மருத்துவமனையில் சிகிச்சையின் போது இறந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்த... மேலும் பார்க்க