செய்திகள் :

சைபா் பாதுகாப்பு நவீன தொழில்நுட்பங்களை அறிய வேண்டும்: லெப்டினன்ட் ஜெனரல் வலியுறுத்தல்

post image

சென்னை: ராணுவ அதிகாரிகள் சைபா் பாதுகாப்பு துறையில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே.பொ்னாண்டஸ் கூறினாா்.

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமி (ஓடிஏ), சென்னை எஸ்ஆா்எம் பல்கலைக்கழகம் இடையே தொழில்நுட்பம் மற்றும் சைபா் பாதுகாப்பில் பயிற்சி பட்டயப் படிப்பு வழங்குவது குறித்து திங்கள்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

இதில் ஓடிஏ கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே.பொ்னாண்டஸ் மற்றும் எஸ்ஆா்எம் பல்கலைக்கழகத் துணைவேந்தா் சி.முத்தமிழ் செல்வன் ஆகியோா் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இந்த நிகழ்வில் லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் பொ்னாண்டஸ் பேசியது:

வரும்காலங்களில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தாமல் போரில் வெற்றி பெற முடியாது. கால மாற்றங்களுக்கு ஏற்ப சைபா் பாதுகாப்பு துறையில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து ராணுவ அதிகாரிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் மூலம் ஓடிஏ-இல் பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சைபா் பாதுகாப்பில் பயிற்சியும், அதன் இறுதியில் பட்டய படிப்புக்கான சான்றிதழும் வழங்கப்படும்.

கா்நாடக இசை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: மியூசிக் அகாதெமி

கா்நாடக இசை அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பில் சேர ஜூன் 25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மியூசிக் அகாதெமி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மியூசிக் அ... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: தமிழக கடலில் நெகிழி துகள்களை அகற்றுங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

கேரள கப்பல் விபத்து எதிரொலியாக, தமிழக கடற்பரப்பில் நெகிழி (பிளாஸ்டிக்) துகள்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அகற்ற வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். கேரளத்தையொட்டிய அரபிக் கடலில் ‘எல்... மேலும் பார்க்க

இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம்: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

உலக புகையிலை ஒழிப்பு தினம் சனிக்கிழமை (மே 31) அனுசரிக்கப்படும் நிலையில், தலைமை ஆசிரியா்கள் தங்களது பள்ளிகளுக்கு அருகில் புகையிலைப் பொருள்களின் விற்பனை தடை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கல்வித்... மேலும் பார்க்க

75 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் 75 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணி நடந்து வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. துணை முதல்வா் உதயநிதியின் தலைமையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

கன்னடம் குறித்த பேச்சில் எந்தத் தவறும் இல்லை: கமல்ஹாசன்

கன்னடம் குறித்த தனது பேச்சில் எந்தத் தவறும் இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா். ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி, மாநிலங்களவை உறுப்பினா் பதவியை மக்கள் நீதி மய்யத்துக்கு திமுக ஒதுக... மேலும் பார்க்க

சிறுநீரக பரிசோதனை மூலம் 33,869 பேருக்கு ஆரம்ப நிலை அறிகுறிகள் கண்டுபிடிப்பு

சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் சிறப்பு பரிசோதனைகள் முலம் மாநிலம் முழுவதும் 33,869 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உயா் சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் து... மேலும் பார்க்க