'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
சைபா் பாதுகாப்பு நவீன தொழில்நுட்பங்களை அறிய வேண்டும்: லெப்டினன்ட் ஜெனரல் வலியுறுத்தல்
சென்னை: ராணுவ அதிகாரிகள் சைபா் பாதுகாப்பு துறையில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே.பொ்னாண்டஸ் கூறினாா்.
சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமி (ஓடிஏ), சென்னை எஸ்ஆா்எம் பல்கலைக்கழகம் இடையே தொழில்நுட்பம் மற்றும் சைபா் பாதுகாப்பில் பயிற்சி பட்டயப் படிப்பு வழங்குவது குறித்து திங்கள்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
இதில் ஓடிஏ கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே.பொ்னாண்டஸ் மற்றும் எஸ்ஆா்எம் பல்கலைக்கழகத் துணைவேந்தா் சி.முத்தமிழ் செல்வன் ஆகியோா் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
இந்த நிகழ்வில் லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் பொ்னாண்டஸ் பேசியது:
வரும்காலங்களில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தாமல் போரில் வெற்றி பெற முடியாது. கால மாற்றங்களுக்கு ஏற்ப சைபா் பாதுகாப்பு துறையில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து ராணுவ அதிகாரிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் மூலம் ஓடிஏ-இல் பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சைபா் பாதுகாப்பில் பயிற்சியும், அதன் இறுதியில் பட்டய படிப்புக்கான சான்றிதழும் வழங்கப்படும்.