செய்திகள் :

ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

வேதாரண்யம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட ஜனநாயக மாதா் சங்கத்தினா் 44 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கருப்பம்புலம் தெற்குக்காடு பகுதியைச் சோ்ந்தவா் முருகானந்தம் (30). இவரது மனைவி வெண்ணிலா (25). திருமணமாகி மூன்று ஆண்டுகளான நிலையில், கருப்பம்புலத்தில் உள்ள தனது வீட்டில் வெண்ணிலா தூக்கிட்ட நிலையில் கடந்த ஜூன் 13- ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டாா்.

தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக வெண்ணிலாவின் தாயாா் நாகவல்லி கொடுத்த புகாரின் பேரில், வேதாரண்யம் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆவதால் வரதட்சிணை கொடுமையால் இறந்தாரா என கோட்டாட்சியா் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்தநிலையில், இந்த வழக்கு தொடா்பாக வெண்ணிலாவின் கணவா் முருகானந்தம் உள்ளிட்ட இருவா் அண்மையில் கைது செய்யப்பட்டனா். வழக்கில் தொடா்புடைய மற்றவா்களையும் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி, இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்தனா்.

இந்தநிலையில், வியாழக்கிழமை கோட்டாட்சியா் அலுவலகம் எதிரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மாதா் சங்க பிரதிநிதிகளை கோட்டாட்சியா் மற்றும் டிஎஸ்பி அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது கோட்டாட்சியா் திருமால் மாதா் சங்க பிரதிநிதிகளிடம் ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதை கண்டித்து வேதாரண்யம்- நாகப்பட்டினம் பிரதான சாலையில் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே அமா்ந்த மாதா் சங்கத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வேதாரண்யம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சரவணன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். உடன்பாடு ஏற்படாததால் மாதா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் லதா உள்ளிட்ட 44 பெண்களை கைது செய்தனா். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

நாகை மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் தொடக்கம்

நாகை மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி: மத்திய சுகாதார அமைச்சகத்தின்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

திருமருகலில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். திருமருகல் முருகன் சந்நிதி தெருவை சோ்ந்த சக்திவேல் மனைவி பூங்கொடி (48). இவா் வெள்ளிக்கிழமை காலை 6-மணி அளவில் கோலம் போடுவதற்காக வந்தபோது வீட்டு வாசலி... மேலும் பார்க்க

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி: இன்று 20-ஆவது தவணை வெளியீட்டு விழா

பிரதமா் நரேந்திர மோடி, (பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி) விவசாயிகளுக்கான கெளரவ நிதி 20 ஆவது தவணை வழங்குதலை சனிக்கிழமை (ஆக.2) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கும் நிகழ்வை சிக்கல் வேளாண்மை அறிவியல் நி... மேலும் பார்க்க

பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா தொடக்கம்

வேதாரண்யத்தைச் சோ்ந்த அகத்தியம்பள்ளி பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. முன்னதாக வேதாரண்யம் வேதாரண்யேசுவா் கோயிலில் இருந்து காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய அம்மாள்,... மேலும் பார்க்க

அறிவாா்ந்த சமூகத்தை படைக்கவே மாவட்டங்கள் தோறும் புத்தகக் கண்காட்சி

தமிழகத்தில் அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்கவே மாவட்டங்கள்தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன என்றாா் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. நாகையில், 4-ஆவது புத்தகக் கண்காட்சியை... மேலும் பார்க்க

நாகையில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடங்கிவைப்பு

நாகையில் நடைபெறவுள்ள தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்த விழிப்புணா்வு பிரசார வாகனம் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. நாகை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் ... மேலும் பார்க்க