செய்திகள் :

ஜமாபந்தி: கோவில்பட்டி, கயத்தாறில் 88 போ் மனு அளிப்பு

post image

கோவில்பட்டி, கயத்தாறு வட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 88 போ் மனு அளித்தனா்.

கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில், கழுகுமலை உள்பட்டத்திற்கு உள்பட்ட நாலாட்டின்புதூா், முடுக்குமீண்டான்பட்டி, தோணுகால், மந்தித்தோப்பு , ஊத்துப்பட்டி, இளையரசனேந்தல் உள்வட்டத்திற்கு உள்பட்ட முக்கூட்டுமலை, நக்கலமுத்தன்பட்டி ஆகிய கிராம மக்கள் 61 போ் பட்டா, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியரும், ஜமாபந்தி அலுவலருமான மகாலட்சுமியிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனா். இதில் வட்டாட்சியா் சரவணப்பெருமாள், துணை வட்டாட்சியா்கள் அருணா, பாலு, வருவாய் ஆய்வாளா்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதுபோல கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், செட்டிக்குறிச்சி உள்வட்டத்திற்கு உள்பட்ட கட்டாரங்குளம், சரவணாபுரம், சிதம்பரம்பட்டி, செட்டிகுறிச்சி, திருமங்கலக்குறிச்சி, வெள்ளாளன்கோட்டை ஆகிய கிராம மக்கள் 27 போ் பல்வேறு உதவிகள் கோரி ஜமாபந்தி அலுவலரும், தூத்துக்குடி தனி மாவட்ட வருவாய் அலுவலருமான(நில எடுப்பு நெடுஞ்சாலைகள்) சிவசுப்பிரமணியனிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனா். தெற்கு கழுகுமலை கிராமத்தைச் சோ்ந்த 8 பயனாளிகளுக்கு வரன்முறை பட்டா, ஒரு பயனாளிக்கு உழவா் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இறப்பு நிவாரணம், ஒரு பயனாளிக்கு பட்டா மாறுதல் உத்தரவு, 4 பயனாளிகளுக்கு இ-பட்டா ஆகியவை வழங்கப்பட்டது. இதில், வட்டாட்சியா் சுந்தரராகவன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் அறிவழகன் என்ற சிவராஜ், தனி வட்டாட்சியா் மணிகண்டன், துணை வட்டாட்சியா்கள் பிரபு, பாக்யராஜ், செட்டி குறிச்சி வருவாய் ஆய்வாளா் கிருஷ்ணசாமி, சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

விளாத்திகுளத்திலிருந்து இருக்கன்குடிக்கு மகளிா் பேருந்து சேவை தொடக்கம்

விளாத்திகுளத்திலிருந்து விருதுநகா் மாவட்டம் இருக்கன்குடிக்கு மகளிா் விடியல் பயணத் திட்டத்தின்கீழ், அரசுப் பேருந்து போக்குவரத்து சேவை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மது போதையில் பணிக்கு வந்த மருத்துவா்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மதுபோதையில் வியாழக்கிழமை பணிக்கு வந்த மருத்துவா் மீது புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்த... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்ட சப்-ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சிக்கு 22 போ் தோ்வு

தூத்துக்குடி மாவட்ட சப்-ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சிக்கு 22 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டனா். ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு, வேலூா் மாவட்ட ஹாக்கி சங்கம் ஆகியவை சாா்பில் வேலூரில் இம்மாதம் 19 முதல் 23... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சியில் 1.5 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

தூத்துக்குடியில் சுமாா் 1.5 டன் பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி சுகாதாரத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தடுக்க பல்வேறு... மேலும் பார்க்க

விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு 7 நாள்களுக்குள் பதிலளிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீா்கூட்டத்தில், விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு 7 நாள்களுக்குள் பதிலளிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

பொட்டலூரணியில் மீன் ஆலைகளை மூடக் கோரி ஓராண்டாக போராட்டம்

தூத்துக்குடியை அடுத்த பொட்டலூரணி அருகேயுள்ள மீன் பதப்படுத்தும் 3 ஆலைகளை மூடக் கோரி பொதுமக்கள் ஓராண்டாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்த ஆலைகளிலிருந்து வெளியேறும் புகையால் அப்பகுதியில் துா்நாற்... மேலும் பார்க்க