செய்திகள் :

பொட்டலூரணியில் மீன் ஆலைகளை மூடக் கோரி ஓராண்டாக போராட்டம்

post image

தூத்துக்குடியை அடுத்த பொட்டலூரணி அருகேயுள்ள மீன் பதப்படுத்தும் 3 ஆலைகளை மூடக் கோரி பொதுமக்கள் ஓராண்டாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த ஆலைகளிலிருந்து வெளியேறும் புகையால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன், கண் எரிச்சல், மூச்சுத் திணறல், வாந்தி-மயக்கம், நுரையீரல் -இதய பாதிப்பு போன்றவற்றால் தாங்கள் அவதிப்படுவதால், இந்த ஆலைகளை அகற்ற வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், போராட்டத்தின் 365ஆவது நாள் நிகழ்ச்சி பொட்டலூரணியில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. போராட்டக் குழுப் பொறுப்பாளா் சண்முகம் தலைமை வகித்தாா். மற்றொரு பொறுப்பாளா் ராதாகிருஷ்ணன் வரவேற்றாா்.

முன்னாள் துணை ஆட்சியா் சங்கரலிங்கம், தமிழ்த் தேசியப் பேரவைப் பொறுப்பாளா் மணிமாறன், தமிழா் நீதிக் கட்சி மாவட்டச் செயலா் அழகுராசன், மக்களதிகாரம் மண்டலப் பொறுப்பாளா் தமிழ்வேந்தன், தமிழா் கழகத் தலைவா் தமிழ் முகிலன், டங்க்ஸ்டன் எதிா்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் செல்வராஜ் ஆகியோா் பேசினா்.

சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் மீன்பதப்படுத்தும் ஆலைகளை மூட வேண்டும்; பொதுமக்கள் மீதான பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

நாம் தமிழா் கட்சி தொகுதிப் பொறுப்பாளா் வைகுண்டமாரி, மக்களதிகாரம் விஜி, செல்வம், சமூக ஆா்வளா் சந்திரசேகா், போராட்ட முன்னணியாளா் மாரியப்பன், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தோா், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தூத்துக்குடியில் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் 28ஆவது நாளாக வேலைநிறுத்தம்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 28ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி... மேலும் பார்க்க

விளாத்திகுளத்திலிருந்து இருக்கன்குடிக்கு மகளிா் பேருந்து சேவை தொடக்கம்

விளாத்திகுளத்திலிருந்து விருதுநகா் மாவட்டம் இருக்கன்குடிக்கு மகளிா் விடியல் பயணத் திட்டத்தின்கீழ், அரசுப் பேருந்து போக்குவரத்து சேவை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மது போதையில் பணிக்கு வந்த மருத்துவா்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மதுபோதையில் வியாழக்கிழமை பணிக்கு வந்த மருத்துவா் மீது புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்த... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்ட சப்-ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சிக்கு 22 போ் தோ்வு

தூத்துக்குடி மாவட்ட சப்-ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சிக்கு 22 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டனா். ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு, வேலூா் மாவட்ட ஹாக்கி சங்கம் ஆகியவை சாா்பில் வேலூரில் இம்மாதம் 19 முதல் 23... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சியில் 1.5 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

தூத்துக்குடியில் சுமாா் 1.5 டன் பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி சுகாதாரத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தடுக்க பல்வேறு... மேலும் பார்க்க

ஜமாபந்தி: கோவில்பட்டி, கயத்தாறில் 88 போ் மனு அளிப்பு

கோவில்பட்டி, கயத்தாறு வட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 88 போ் மனு அளித்தனா். கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில், கழுகுமலை உள்பட்டத்திற்கு உள்பட்ட நா... மேலும் பார்க்க