செய்திகள் :

ஜாகுவார் லேண்ட் ரோவர் சிஇஓ-வாக முதல் தமிழர்! யார் இந்த பாலாஜி?

post image

டாடா மோட்டார்ஸுக்கு சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த பி.பி. பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் அட்ரியன் மார்டெலின் பதவிக் காலம் வருகின்ற அக்டோபருடன் நிறைவடையும் நிலையில், பி.பி. பாலாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக கடந்த 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். டாடா நிறுவனத்தின் நிதி மற்றும் வளர்ச்சிக்கான உத்தியை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்து வரும் இவருக்கு, தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

யார் இந்த பாலாஜி?

தமிழகத்தைச் சேர்ந்த பாலாஜி, 1992 ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் பி.டெக். மெக்கானிக்கல் பட்டம் பெற்றார். பின்னர், 1993 ஆம் ஆண்டு கொல்கத்தா ஐஐடியில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.

யூனிலீவர் நிறுவனத்தில் 1995 ஆம் ஆண்டு தனது பணியைத் தொடங்கிய பாலாஜி, நிறுவனத்தின் மூத்த நிதி மேலாண்மை அதிகாரியாக இந்தியா, சிங்கப்பூர், பிரிட்டன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். 2017 வரை ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பணிபுரிந்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் குழும தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்றார். டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

டாடா குழுமத்தின் கீழ் உள்ள டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள், டாடா பயணிகள் மின்சார மொபிலிட்டி, டாடா மோட்டார்ஸ் நிதி குழுமம், ஏர் இந்தியா, டைட்டன் நிறுவனம், டாடா நுகர்வோர் தயாரிப்புகள், அக்ராடாஸ் லிமிடெட் (யுகே) மற்றும் அக்ராடாஸ் எனர்ஜி ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் வாரிய (போர்ட்) உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

P.B. Balaji, a native of Tamil Nadu, has been appointed as the CEO of Jaguar Land Rover, a company owned by Tata Motors.

இதையும் படிக்க : நீதிமன்றம் கண்டனம்: இது கட்சிகளின் ஜனநாயக உரிமை! - ராகுலுக்கு இந்தியா கூட்டணி ஆதரவு

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

தேசிய தலைநகர் அருகே சட்டவிரோதமாக வசித்துவந்த ஐந்து வங்கதேசத்தினர் செங்கோட்டை அருகே கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். காவல்துறையின் கூற்றுபடி, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜூலை 15 முதல் தில்லிய... மேலும் பார்க்க

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

புனேவில் உள்ள புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், கையில் பணமில்லாததால், நடைபாதையில் படுத்துறங்கிய காட்சியும், அவர் நிறுவனத்தின் மீது வைத்திருந்த குற்றச்சாட்டும் சமூக வலைதளத்தில் வைரலாகிய... மேலும் பார்க்க

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியை வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு மாதத்துக்கும் ம... மேலும் பார்க்க

மறைந்த சத்யபால் மாலிக் பற்றி அறியப்படாத தகவல்கள்!

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வாழ்க்கைப் பயணம் என்பது, மாணவர் தலைவராகத் தொடங்கி, அரசியலில் மிகப்பெரிய உயரங்களைத் தொட்டு, லட்சியங்கள், சர்ச்சைகள், அரசியல் சாதனைகளின் பட்டியலுடன் நீள்... மேலும் பார்க்க

மேகவெடிப்பால் வெள்ளத்தில் மிதக்கும் உத்தரகாசி! 20 விடுதிகள் சேதம்..12 பேர் மாயம்!

உத்தரகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால், கனமழை பெய்து ஏராளமான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தரகாசி மாவட்டத்தில், இன்று (ஆக.5) திடீரென உண்டான மேகவெடிப்பால் கனமழை பெய்து வரு... மேலும் பார்க்க

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

தில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கில் ஆதாரங்கள் இல்லை என்பதால் வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது.தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது பொதுப்பணித் துறையில் ஊழல் தொடர்பாக அப்ப... மேலும் பார்க்க